மீனவர்கள் கைது: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை, ஜூலை 24- தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப் படுவதையும், தாக்குதலுக்கு உள்ளாவ தையும் கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் மீனவர்களை மீட்கக்கோரி ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார். துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தமிழக மீன வர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப் போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக் கத்தக்கதாகும். தமிழக மீனவர்கள் அனை வரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் மழை எச்சரிக்கை
சென்னை,ஜூலை 24- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்களன்று (ஜூலை,25) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாயன்று (ஜூலை 26) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
ரூ.1 கோடி மதிப்புள்ள ரத்தின கற்கள் பறிமுதல்
சென்னை, ஜூலை 24- இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த 1 கோடி மதிப்புடைய ரத்தின கற்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் முகமது அன்சர் (24) என்ற பயணியின் வயிற்றில் ஏதோ மர்மப்பொருள் இருப் பதை கண்டு அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்பொழுது அவர் வயிற்றுக்குள் ரத்தினக்கற்கள் இருப்பது தெரியவந்தது. சிறுசிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரத்தின கற்கள் வெளியே எடுக்கப்பட்டன. மொத்தம் 1,746 ரத்தின கற்களை விழுங்கி கடத்தி கொண்டு வந்திருந்தார். மொத்த எடை 8309 காரட். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 94.34 லட்சம். ஆனால் இந்தி யாவில் இந்த ரத்தின கற்கள் மதிப்பு சுமார் 1 கோடிக்கு மேல் என்று கூறப்படு கிறது.