states

இன்று தடுப்பூசி முகாம்

சென்னை, மே 7- தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 4ஆவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் சுமார் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை 2அவது தவணை தடுப்பூசி  போட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் என சுமார் 2 கோடி பேருக்கு  தடுப்பூசி செலுத்த வேண்டி யுள்ளது. இவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த வசதியாக  ஞாயிறன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தாவது: 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படு கிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட் டுள்ளன. அதை வைத்து வீடு  வீடாகச் சென்று களப்பணி யாளர்கள் அழைப்பு விடுத்து வரு கிறார்கள்.இதுவரை இல்லாத  அளவுக்கு அதிகமான எண்ணிக் கையில் தடுப்பூசிகள் செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.