புதுதில்லி, ஜூன் 22- ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு (‘Agnipath’ Recruitment Scheme) எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதன் மீது “தங்கள் தரப்பு வாதத்தை கேட்கா மல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது” என்று ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தரைப்படை, கடற்படை, விமானப் படை (Army, Navy, Air Force) ஆகிய மூன்று படைப் பிரிவுகளுக்கும் நான்கு ஆண்டுகால காண்ட்ராக்ட் அடிப்படை யில் ஆட்களைத் தோ்வு செய்யும் ‘அக்னிபாத்’ திட்டத்தை கைவிடுமாறு ஒன்றிய அரசு உத்தரவிடக் கோரி இளைஞர்கள் தரப்பில் திங்கட்கிழமை யன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும், நாடாளுமன்றத்தில் முறையான ஒப்புதல் பெறாமலும், அர சிதழில் அறிவிக்கை வெளியிடாமலும் நூற்றாண்டு கால ராணுவத் தோ்வு முறையை ஒன்றிய அரசு கடந்த ஜூன் 14-இல் மாற்றியுள்ளது. மேலும் முப்ப டைக்கான ஆள்சோ்ப்பு நடைமுறை யில், இந்தப் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு திணித்துள்ளது. இதனை ஒன்றிய அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண் டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒன்றிய அரசு இடையீட்டு (கேவியட்) மனு தாக் கல் செய்துள்ளது. “அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வழக்கில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப் பிக்கக் கூடாது” அந்த இடையீட்டு மனு வில் குறிப்பிட்டுள்ளது.