புதுதில்லி, டிச.15- கோயம்பத்தூர் வடக்கில் புதிதாகக் கட்டப்பட்டி ருக்கும் நடைபாலத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், கோயம்புத்தூர் வடக்கில், புதிதாக கட்டப்பட்டிருக்கும் நடைபாலத்தை, மேட்டுப்பாளை யம் சாலையை நோக்கி விரிவாக்கம் செய்வதற்கு ஒப்புதல் வேண்டி முன்மொழிவு ஏதேனும் வரப் பெற்றிருக்கிறதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன? என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சேலம் கோட்டம் - வட கோயம்புத்தூர் சந்திப்பில் 3.62 கோடி ரூபாய் மொத்த செலவிலான 6 மீட்டர் அகலமுள்ள நடைபால விரிவாக்க முன்மொழிவுக்கு அக்டோபர் 11 அன்று தென்னக இரயில்வேக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். முறைசாராத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை மேலும் பி.ஆர். நடராஜன், கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் முறை சாராத் தொழிலாளர்களு க்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமாக நிவாரணத்தொகை அளிக்கப்பட்டதா என்று எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு, அவ்வாறு எவருக்கும் அளிக்கப்பட வில்லை என்று தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஷ்வர் தெலி கூறியுள்ளார்.