சேலம்,ஏப்.5- சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே லாரி தொழில் முடங்கி உள்ள நிலையில் இந்த விலை உயர்வால் தொழில் மேலும் பாதிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலாவதியான சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அரசு அதை கண்டுகொள்ளவில்லை. 21 நாட்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக கூட்டமைப்பு நிர்வாகி கள் ஆலோசித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகா ராஷ்டிரா, கேரளா உள்பட 7 மாநிலங்க ளில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். எனவே விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில்ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.