அகர்தலா, பிப். 17 - திரிபுராவில் பாஜக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கியாவது ஆட்சியமைப்பேன் என்று திப்ரா மோதா கட்சித் தலைவர் தேபர்மா கூறியுள்ளார். இதற்காக தனக்குச் சொந்தமான அரண்மனையை விற்க வும் தயார் என்று அறிவித்துள்ளார். திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கும் கட்சி, ‘திப்ரா மோதா கட்சி’யாகும். முன்பு காங்கிரசில் இருந்தவரும், திரிபுரா மன்னர் வாரிசுமான பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தேபர்மா, கடந்த 2019-இல் ‘திப்ரா மோதா கட்சி’யைத் துவங்கினார். பழங்குடியின சமூகத்தினருக் கென தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் எனும் ‘கிரேட்டர் திப்ரா லாந்து’ கோரிக்கையை முன்வைத்து, இக்கட்சியைத் துவங்கிய தேபர்மா, திரிபுரா மக்கள்தொகையில் 32 சத விகிதம் பேர்களாக உள்ள பழங்குடி யினரின் வாக்குகளைக் குறிவைத்து தனிக்கட்சி ஆரம்பித்தார். அதற்கேற்ப வே, 2021 திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜகவையும் அவர் தோற்கடித்தார். தற்போது மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களில் திப்ரா மோதா கட்சி போட்டியிட்டுள்ளது. இதனிடையே, இந்தத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்கள் கிடைக்கவில்லை என்றால் பாஜக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவேன் என்று பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தெபர்மா பகிரங்க மாக கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கள் மற்றும் குதிரை பேரம் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் தேபர்மா, “ஆளும் பாஜகவுக்கு எதிராக இப்போது எனது கட்சி மட்டுமே தனியாக நின்று போராடுகிறது.. 30 இடங்களுக்குக் குறைவான இடங் களில் வென்றால்.. எனது அரண்மனை யின் சில பகுதிகளை விற்று பாஜக- விடம் இருந்து 25-30 எம்எல்ஏக்களை வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. இது குறித்தும் நான் சீரியசாக ஆலோசித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இங்குப் பணம்தான் அனைத்தும் என்பதைப் போலப் பேசு கிறீர்கள்.. ஏதோ எங்கள் எம்எல்ஏ-க்களை மட்டுமே அவர்களால் வாங்க முடியும் என்பது போலச் சொல்வது ஏன்? எங்களைப் பற்றி மட்டும் ஏன் கேள்விகள் எழுப்புகிறீர்கள்? பாஜக- வில் இருப்பவர்களும் கூட விலைக்கு வாங்கப்படலாம் என்பதை மறந்து விடாதீர்கள்” என்றும் நிருபர்களிடம் கூறயுள்ளார். எனினும், பாஜக எம்எல்ஏ-க்களை தேபர்மா இழுக்கப் போகிறாரா, அல்லது பாஜக-வோடு தேபர்மா கரையப் போகிறாரா? என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரிய வரும். ஏனெனில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வதை மடைமாற்றவே மன்னர் குடும்ப வாரிசான தேபர்மா தேர்தலில் இறங்கி விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.