கடலூர், ஜூன் 5- கடலூர் அருகே ஏ.குச்சிப்பாளை யம் கெடிலம் ஆற்று தடுப்பணையில் மூழ்கிய நான்கு சிறுமிகள் உட்பட 7 பெண்கள் உயிரிழந்த பெரும் துயர சம்பவம் நேர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஏ.குச்சிப்பாளையத்தில் கெடி லம் ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு தடுப்பணை அமைக் கப்பட்டது. இந்த தடுப்பணையில் தற் போது சேறும் சகதியுமாக உள்ளது. இந்த நிலையில் இப் பகுதியை சேர்ந்த மோகன் மகள் நவநீதம் (20), மருமகள் பிரியா (19) ஆகியோர் தடுப் பணையில் ஞாயிறன்று (ஜூன் 5) குளிக்கச் சென்றனர். அவர்களுடன் அவர்களது வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த உறவின ரான ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி (13), காவியா (11) ஆகியோரும் சென்றனர். இதில், தடுப்பணை சேற்றில் சிக்கியவரை ஒருவர் மாற்றி ஒருவர் காப்பாற்ற முயன்று சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த முத்துராமன் மகள் சுமதா (16), அமர்நாத் மகள் மோனிகா (16), சங்கர் மகள் சங்கவி (15) ஆகி யோரும் காப்பாற்றச் சென்று அவர் களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். அனைவருமே வெளியேற இயலா மல் நீரில் மூழ்கினர். தகவலறிந்த அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மீட்புப் பணி யில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவ ராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த னர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏழு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
துயரில் கதறிய கிராமம்
தகவலறிந்த கிராம மக்கள் மற் றும் உறவினர்கள் மருத்துவமனை யில் திரண்டு கதறி அழுதனர். அப்பகு தியே சோகமாக மாறியது. மேலும் ஒரே கிராமத்தில் 5 பேர் இறந்ததாலும் இறந்த அனைவரும் உறவினர்கள் என்பதாலும் அந்த கிராமமே சோகத் தில் மூழ்கியது. இதில், இறந்த பிரியா ஒரு மாதத்திற்கு முன்புதான் திரு மணம் செய்து கொண்டது குறிப்பிட் டத்தக்கது.
அமைச்சர்-சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்
இறந்தவர்களின் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் பால சுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, காவல் கண்காணிப்பா ளர் சக்தி கணேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீரில் மூழ்கி இறந் தது குறித்து விசாரணை நடத்தப் படும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன், மாநகர செயலாளர் ஆர்.அமர் நாத், ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பலியா னோர் குடுபத்தினர் மற்றும் உறவினர் களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் அறிவித்து, முதல்வர் ஸ்டாலின், துயரமும், வேதனையும் தெரிவித்துள்ளார்.