சென்னை,ஏப்.24- பெட்ரோல்,டீசல் விலை உயர்வாலும் அதன்மூலம் அத்தியாவசியப் பொருட் கள் விலை உயர்வாலும் மக்கள் அன்றாடம் அவதிப் பட்டு வருகின்றனர். ஆனால் விலை உயர்வை கட்டுப் படுத்த மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து, மக்கள் தலையில் அடுத்த சுமையை ஏற்றி யுள்ளது. கோயம்பேடு மார்கெ ட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார், ஆந்திரா மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதி களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் 24 அன்று 45 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்து வருவ தால் விலைதொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.