சென்னை, மே 20 - திப்பு சுல்தான், சமூக சீர்திருத்தவாதிகள் தந்தை பெரியார், கேரளத்தின் நாரா யண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளையும் பள்ளிப் பாடத்திலிருந்து நீக்கியுள்ள கர்நாடக பாஜக அரசின் மதவெறிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், உண்மையான வரலா றுகளை மறைத்து, மத வெறிப் பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின் றது. ஆர்எஸ்எஸ் சங்பரி வார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை, கற்பனைப் புராணங்கள் இதிகாசங் களை, வரலாறாகக் கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் கள். குருகுலக் கல்வியை நிலை நாட்டுகின்ற வகை யில் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்க முனைகின்றார்கள். செத்துப்போன சமஸ்கி ருத மொழியை உயிர்ப்பிக்க 650 கோடி ரூபாய் செலவில் மூன்று பல்கலைக்கழ கங்களை நிறுவி இருக்கின் றார்கள்.
அந்த வழியில் கர்நாடக பாஜக கட்சி அரசு, தன் பங்குக்கு, கர்நாடக மாநில வரலாறைத் திரிக்க முயற்சிக்கின்றது. ஆங்கில அரசை எதிர்த்துப் போர் புரிந்து வீர வரலாறு படைத்த திப்பு சுல்தான் குறித்த பாடங் களை, ஒன்று முதல் பத்து வரை பள்ளிப் பாடங்களில் இருந்து ஏற்கனவே நீக்கி விட்டார்கள். அடுத்து இப்போது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத் தின் நாராயண குரு ஆகி யோரைப் பற்றிய குறிப்பு களை நீக்கி விட்டனர். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் பேசியதை பாடமாக ஆக்கி இருக்கின்றார்கள். சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முழுக்க முழுக்க மதச்சார்பு அமைப்புகளைப் பற்றி எழுதி இருக்கின்றார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருக் கிறார். இவர்கள் எவ்வள வுதான் முயற்சித்தாலும், தந்தை பெரியார் நாராயண குரு ஆகியோரின் பெயர் களை, அவர்கள் நிகழ்த்திய சமூக சீர்திருத்த புரட்சியை, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்து விட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.