சென்னை,ஜூன் 6- உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும்வகையில், நபிகள் நாயகத்தை அவமதித்தவர் களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவள வன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்தி லும் நபிகள் நாயகமான முகமது நபியை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய தலைக்குனிவு ஏற்பட்டிருக் கிறது.
அத்துடன், அரபு நாடுகளில் வேலை செய்து வரும் கோடிக்கணக் கான இந்தியர்களின் வேலை வாய்ப்புகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமான பாஜக நிர்வாகிகளை இந்திய அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா என்பவர், தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசி னார். இன்னொரு நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலை தளத்தில் நபி பெருமானை இழிவுபடுத் திப் பதிவு செய்தார். இதனால் அரபு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட நாடு களில் இந்திய பொருட்களைப் புறக் கணிப்போம் என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடைகளிலிருந்து இந்தியப் பொருட்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. கத்தார் அரசு இந்திய குடியரசு துணைத் தலை வர் வெங்கையா நாயுடுவுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளது. இசுலாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகவும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வெறுப்பைப் பரப்பிவரும் சனாதனப் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.