டோனாவூர் நாட்டில் கடும்பஞ்சம். மழை பெய்யவில்லை. விவசாயம் நடக்கவில்லை. மக்கள் குடி தண்ணீருக்கும், உணவுக்கும் அங்குமிங்கும் அலைந்தனர். பலர் ஊரைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். கதி ரேசன் என்ற த்ச்சு வேலை செய்பவரும் ஊரை விட்டுப் புறப்பட்டு போய் விடலாம் என்று முடிவு செய்தார். உடனே தன் மனைவி யிடம் துணிமணி, பாத்திரங்களை மூட்டை யாகக் கட்டச் சொன்னார். கதிரேசனும் அவசியமான பொருட் களை எடுத்து வைத்தார். அப்போது ஒரு சிறிய பழைய மரப்பெட்டியைப் பார்த் தார். அது அவருடைய தாத்தாவின் பெட்டி. இதுவரை அதைப் பற்றிக் கவலைப்பட்ட தில்லை. நீண்ட நாட்களாகத் திறக்காத தால் இறுக்கமாக இருந்தது. சுத்தியலைக் கொண்டு அடித்தார். பெட்டி உடைந்தது. உள்ளே ஒரு பழைய துருப்பிடித்த மோதிரம் இருந்தது. அதைக் கையில் எடுத்து துடைத்தார் கதிரேசன். உடனே அந்த இடத்தில் திடீரென ஒளிவெள்ளம் தோன்றியது. அந்த ஒளிக்குப் பின்னால் ஒரு தேவதை தோன்றினாள். அவள் கதிரேச னைப் பார்த்து, “ஐயா.. இந்த மோதிரம் அதிசய மோதி ரம். என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடிய மோதிரம். ஆனால் உங்களுக்காக எதையும் கேட்கக்கூடாது. அடுத்தவர்களுக்காகக் கேட்க வேண்டும். என்ன வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டு மோதிரத்தைத் தேய்க்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மட்டுமே இந்த மோதிரத்தில் அற்புதசக்தி இருக்கும்” என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார். உடனே கதிரேசன் மனைவி யிடம் சொன்னார். மனைவி உடனே, “ஊரில் மழை பெய்ய வேண்டும் என்று கேளுங்கள்..” என்றார்.
“அதனால் நமக்கு என்ன லாபம்?” என்று கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றார் கதி ரேசன். நாள் முழுவதும் யோசித்துக் கொண்டி ருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் மனைவி, “எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று கேளுங்கள்..” என்றார். “அதனால் நமக்கு என்ன லாபம்? “ என்று கேட்டு விட்டு உறங்கப்போனார் கதி ரேசன். இரண்டாவது நாள் காலையில் கதிரேச னின் மனைவி, “மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண் டும் என்று கேளுங்கள்..” என்றார். “அதனால் நமக்கு என்ன லாபம்?” என்று சொல்லிவிட்டு வெளியில் போனார் கதிரேசன். மாலையில் வீடு திரும்பினார். “குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கேளுங்கள்..” என்று மனைவி சொன்னார். “அதனால் நமக்கு என்ன லாபம்? “ என்று சொல்லி விட்டு உறங்கப்போய் விட்டார் கதிரேசன்.
மூன்றாவது நாள் வந்தது. மனைவி கவ லைப்பட்டார். தன்னுடைய கணவன் ஏன் இப்படி சுயநலமாக இருக்கிறார்? குழப்ப மாக இருந்தது. ஆனால் ஒரு வழியும் தெரிய வில்லை. காலையில் கதிரேசன் எழுந்த தும், “ஏங்க மழை பெய்யுமா?“ “மழை பெய்யணும்..” “மழை பெய்தால் தானே மக்கள் மகிழ்ச்சியாக இருப்பாங்க இல்லையா?” “ஆமாமா..” “அப்போது தானே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பாங்க.. இல்லையா?” “சரிதான்.. அப்போது தான் குழந்தை கள் மகிழ்ச்சியாக இருப்பாங்க.. ஆனால்..” என்று கதிரேசன் சொல்லி முடிக்கு முன்னே, “ஏங்க மோதிரத்தில் ஏதோ தூசி ஒட்டி யிருக்கிற மாதிரி இருக்கு..” என்றார் மனைவி. “எங்கே.. “ என்று சொல்லிக் கொண்டே மோதிரத்தைத் துடைத்தார் கதிரேசன். அவ்வளவு தான். ஊருக்கு மேலே மேகங்கள் திரண்டன. மழை பொழிந்தது. மக்கள் மகிழ்ச்சியில் ஆடிப்பாடினார்கள். குழந்தைகளும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்கள். மோதிரத்தில் வந்த தேவதை கதிரேசன் மனைவியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார். அதோ பாருங்கள். மறுநாள் வரிசையாக வயலில் உழு வதற்காக ஏர்க்கலப்பை செய்ய கதிரேச னைத் தேடி மக்கள் வரிசையில் நின்றார் கள். ஊர் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருக்கமுடியும் என்று கதிரேசனுக்கு இப் போது புரிந்தது.