states

img

தமிழ்நாட்டில் மத வெறுப்புணர்வு அறவே கிடையாது

சென்னை, செப். 6- தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை கோயில்கள் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள மக்களிடையே மத வெறுப்புணர்வு என்பது அறவே இல்லை என்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  2017ஆம் ஆண்டு உத்தரப்பிர தேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் 80 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. அப்போது அங்கு பணியாற்றிய மருத்துவர் கஃபீல் கான் உடனடி யாக தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார். மேலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தான் குழந்தைகள் உயிரிழந்ததை முதன்முதலில் ஊடகங்களுக்கு தெரி வித்தார். இதனால் உத்தரப்பிரதேச பாஜக யோகி அரசின் கோபத்துக்கு ஆளானார். தனது அரசின் மருத்துவத்துறையில் உள்ள குறை பாட்டை அம்பலப்படுத்தியதால் ஆத்திரமடைந்த பாஜக யோகி அரசு ,மருத்துவர் கஃபீல் கானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.  

தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி கஃபீல் கான் விடுதலையானார். இதையடுத்து அந்த மாநிலத்தில்  இருக்க பிடிக்காமல், தமிழ்நாட்டில் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஃபீல் கான் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு மருத்துவர் கஃபீல்  கான் அளித்த பேட்டியில், தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் கோயில்கள் இருக்கும். மூலைக்கு மூலை கோயில்களை கட்டி இருக்கிறார் கள். ஆனால், இங்குள்ள மனிதர்கள்  ஒருபோதும் மதத்தின் அடிப்படை யில் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்டுவதில்லை. மத வெறுப்புணர்வு இங்கு அறவே இல்லை. நான் இங்கு ஒரு வருடமாக பணிபுரிகிறேன். இது வரை யாரும் என்னை முஸ்லிமாக பார்த்ததில்லை. என்னை குழந்தை கள் நல மருத்துவராகத்தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு அளவு கடந்த அன்பு கிடைக் கிறது. தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. இங்கு பேறுகால இறப்பு விகிதம் கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் தற்போது வந்துள்ள நீட் தேர்வால்  இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படு கிறது. பொதுத்தேர்வில் 80 சதவீதம் மதிப் பெண் எடுத்த மாணவனால் மருத்து வக் கல்லூரியில் சேர முடியவில்லை. ஆனால் நீட்டில் வெறும் 20 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவன் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுகிறார் என்று தெரிவித்தார்.