சென்னை,ஏப்.24- நாடு முழுவதும் திறக்கப்படும் 3,500-ல் தமிழகத்தில் கூடுதலாக 83 மக்கள் மருந்தகங்கள் திறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் கூடுதலாக 3,579 மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நாடுமுழுவதும் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 406 மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராணிப் பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், தூத்துக் குடி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்ட ங்களில் மொத்தம் 83 புதிய மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. புதிய மருந்தகங்கள் தொடங்க தனி நபர்கள், வேலையில்லாத மருந்தாளு னர்கள், அரசு நியமித்த முகவர்கள், தன்னார்வ அமைப்புகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் வலைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.