சென்னை, பிப்.15- சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ளதனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் இளம் பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதோடு, அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவரு டைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவானர் கள். பிறகு ஆந்திராவில் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதை யடுத்து, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த னர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை யின்போது, தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல் குமார், இது தொடர்பாக காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதில் அளிக்க உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசா ரணையை வருகிற 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.