states

img

தீராத கடன் சுமையை மக்கள் மீது ஏற்றும் அமெரிக்க அரசு

வாஷிங்டன்,அக்,1 அமெரிக்க அரசாங்கம் இந்த நிதி யாண்டின் துவக்க நாளான அக்டோபர் 1 அதி காலை 12.01-க்கு முடங்கிப் போகும் என்ற நிலை ஏற்பட்டு, கடைசி நிமிடத்தில், சமரச ஏற்பாடாக அடுத்த 45 நாட்களுக்கு மட்டும் அரசுத் துறை களின் செலவினங்களுக்கு நிதி அளிக்கும் வகையில், நிதி மசோதா- அதாவது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘‘பட்ஜெட் செய லிழப்பு” என்பது நூலிழையில் தப்பித்துள்ளது.  அமெரிக்காவில் மீண்டும் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் குடியரசுக் கட்சி, கடன் உச்சவரம்பை அதிகரிக்க ஒத்து ழைப்பு வழங்காமல் பைடன் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு  கடன் பெறும் அளவின் வரம்பு உயர்த்தப் படாத பட்சத்தில் நிதியின்றி அனைத்து துறை களும் முடங்கும்  நிலை ஏற்படும். 268.5 லட்சம் கோடி டாலர் மொத்த உள்நாட்டு  உற்பத்தி (ஜிடிபி) கொண்ட அமெரிக்காவின் கடன் 315 லட்சம் கோடி  டாலர் அளவுக்கு அதி கரித்து நாட்டின்  கழுத்தை நெரிக்கிறது.அதா வது அமெரிக்காவின் ஜிடிபியை விட 20 சத வீதம் கடன் அதிகமாக உள்ளது. அமெரிக்காவுக்கு உருவாகும் இந்த கடன்  நெருக்கடிகள் புதிதல்ல. 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு 78  முறை இது போன்ற நெருக்கடியை அந்நாடு தன் மோசமான பொருளாதார கொள்கையால் எதிர்கொண்டுள்ளது. டிரம்பின் ஆட்சிக் காலத்தில் மட்டும் 3 முறை நெருக்கடி ஏற்பட்டு அரசு பெறும்  கடனின்  வரம்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இத்தகைய நிதி மசோதாவை தான், முடக்க டிரம்ப் கட்சியினர் முயற்சித்தனர்.

அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை விட உக்ரைன் போர் முக்கியம்

பைடன் மற்றும் அவரது ஜனநாயகக் கட்சி யினரைப் பொறுத்தவரை, ரஷ்யாவுக்கு எதி ரான அமெரிக்க-நேட்டோ யுத்தத்திற்கான உதவியில்லாமல் அமெரிக்க மக்களுக்கான எந்த உதவியை அளித்தாலும் அதனை ஏற்கும் நிலையில் இல்லை. ஆளும் ஜனநாயகக் கட்சி யினர், உயர்ந்து கொண்டிருக்கும் இந்த யுத்த த்தின் செலவுகளை உழைக்கும் வர்க்கத்தின் முதுகில் சுமத்துகின்றனர். ஏற்கனவே, பல மில்லி யன் அமெரிக்க குடிமக்களை மருத்துவ உதவி திட்டத்திலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டி ருக்கின்றனர், அக்.1-ஆம் தேதியிலிருந்து தற்கா லிகமாக நிறுத்தி வைத்திருந்த மாணவர் கடன் களை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். 2024ல் தேர்தல் உள்ளதால், அவர்கள் கடந்த கால சமூக நலத் திட்டங்களின் காவலர்கள் போல வேடமிடுகின்றனர்.  

முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடே!

பைடன் அரசின் இந்த நிலையைப் பயன் படுத்தி, டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு களை கைவிடுமாறு குடியரசுக் கட்சியினர் நிர்ப்பந்தித்தது. ‘‘இத்தகைய ஒரு அரசு முடக்கம், செயல்படாத தன்மை, அதனை கவ னிக்கும் அரசியல் எதிர்வினை ஆகியவை அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி புதிய உச்சம் தொட்டிருப்பதின் காத்திரமான வெளிப்பாடு. கடந்த வசந்த காலத்தில் அமெரிக்க நாட்டின்  கடன் சுமை வரம்பை அதிகரிக்க மசோதா நிறை வேற்றியதற்கு சமரசமாக, பைடன் நிர்வாகம், அடுத்த பத்தாண்டுகளில் இராணுவம் அல்லாத செலவுகளுக்கு(மக்கள் நலச் செலவுகள்) 1.3 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் டாலர் என்பது சுமார் 82 லட்சம் கோடி ரூபாய்) டாலர் நிதியைக் குறைக்க ஒப்புக் கொண்டது. 

நிதி முடக்கத்தால் யார் பாதிக்கப்படுபவர்கள்?

அமெரிக்க தேசிய ஒன்றிய ஊழியர்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடக்கத்தின் வாயிலாக இராணுவம் அல் லாத சிவில் ஊழியர்கள் 21 லட்சம் பேரும், கிட்டத் தட்ட 40 லட்சம் ஒன்றிய ஒப்பந்தத் தொழிலாளர் களும் இந்த மாதம் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கட்டாய விடுப்பு (லே-ஆஃப்) கொடுக்கப் பட இருக்கின்ற ஊழியர்களில் தீயணைப்பு வீரர்களும், உள்நாட்டு அரசு நிதி வசூலிப்ப வர்களும் அடங்குவர். நிதி முடக்கம் நான்கு  நாட்களுக்கு மேல் தொடர்ந்தால், அமெரிக்கா வின் அனைத்து விமான நிலையங்களும் முடங்கும். ஏனெனில், ஏற்கனவே விமான கட்டுப்பாட்டு அறைகளில் 2500 கட்டுப்பாட்டா ளர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளதால் தற்போது பணியிலிருப்பவர்கள் நாளொ ன்றுக்கு 10 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது. தற்போது அவர்களுக்கு ஊதியமும் இல்லை என்றால் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். 

குழந்தைகள், பெண்கள், வயோதிகர் 

உடனடி பாதிப்பாக அமெரிக்க அரசு நடை முறைப்படுத்தி வரும் பெண்கள், கைக்குழந்தை கள், குழந்தைகளுக்கான சிறப்பு துணை ஊட்ட ச்சத்து திட்டம் நிறுத்தப்படும். அமெரிக்காவில் சுமார் 70 லட்சம் பேர் இதனால் பயனடைகின்ற னர். இது அமெரிக்காவில் எந்த அளவுக்கு வறுமை உள்ளது என்பதை காட்டுகிறது.  நிதி முடக்கம் ஒரு மாதத்திற்குப் பிறகும் தொடர்ந்தால், மிகவும் ஏழைகளுக்கு வழங் கப்படும் உணவு கூப்பன்(நமது அந்தயோதா திட்டம் போல்) தாமதமாக்கப்படும். தற்போது திட்டமிடப்பட்டிருக்கும், பள்ளிகளில் மதிய உணவு வழங்குவது  பாதிக்கப்படும்.  அதே சமயத்தில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மட்டும் தொடர்ந்து அவர்களின் மாதாந்திர ஊதியங்களை பெற்றுக் கொள்வர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2019-ல் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் 8 கோடி ரூபாய்). 

இராணுவத்திற்கு மட்டுமே இனி அமெரிக்க அரசின் பட்ஜெட்டா?

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த பட்ஜெட் முடக்க அபாயத்தின் பின்னணியில், அமெரி க்க ஆளும் வர்க்கத்தின் ஒருமித்த கருத்து என்ன வென்பதை “குடியரசுக் கட்சியின்  ஆய்வுக்குழு வின் பட்ஜெட் திட்டம்” வெளிப்படுத்துகிறது. இது கடந்த முறை கடன்வரம்பை உயர்த்த பை டனுக்கும், மெக்கார்த்திக்கும் (டிரம்ப் கட்சி எம்.பி.,) இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட நடை முறையாகும்.  இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அரசு  செலவுகளை 16.3 டிரில்லியன் டாலர் அள வுக்கு குறைக்க வேண்டும். மிகப்பெரிய செல்வ ந்தர்களுக்கு சொத்து வரியில் 3.9 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் டாலர் என்பது சுமார் 8000 கோடி ரூபாய்) சலுகை வழங்கப்பட வேண்டும் என்கிறது. மேலும் குடியரசுத் தலை வரின் தனித்த அதிகாரத்தின் மூலம் செய்யப் படும் இராணுவம் அல்லாத செலவுகள் (அவசர பேரழிவிலிருந்து சமூகங்களை பாதுகாக்க செய்யப்படும் செலவுகள்) 3.64 டிரில்லியன் டாலர் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்படும் ஏழைகள்

இவைகளை வெட்டச் சொல்வதன் மூலம் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி முற்றாக அழிக்கப்படும், மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவியைப் பெறுவதற்கான வயதுவரம்பு 67லிருந்து 69ஆக உயர்த்தப்படும், கலை படைப்புகளுக்கு வழங்கப்படும் தேசிய நன்கொடைகள் நிறுத்தப்படும், அரசு பொது ஒலிபரப்புகள் நிறுத்தப்படும்.

ஊழல் மற்றும்  கிரிமினல் அமெரிக்க அரசியல்

அமெரிக்க வரலாற்றில் 15வது முறையாக பட்ஜெட் முடக்கப்படும் அபாயம் எழுந்துள் ளது. ஒவ்வொரு முறையும் பட்ஜெட் முடக்கப் பட்டு மீண்டும் நிறைவேற்றப்படும் போது அந்த நாட்டு ஆளும் வர்க்கத்தின்  வலதுசாரி சாய்மானம் மேலும் அதிகரித்திருக்கும்.  இத்தகைய முடக்கம் நடைபெறுவது, அமெரிக்க அரசியல் அமைப்பின் ஒவ்வொரு துவாரத்தின் வழியாகவும் கிரிமினல்தனம் மற்றும் ஊழல் வழிந்து கொண்டிருப்பதை காட்டுகிறது.