புதுதில்லி, செப். 2 - கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ மற்றும் தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் விஜயேஷ் லால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹீமா கோலி அமர்வு முன்பு வியாழனன்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கன்சால்வேஸ், ‘நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடை பெற்று வருகிறது. பிரார்த்தனை கூட்டங்களுக்கு தடை ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான தரவு களை மனித உரிமை அமைப்புகள் அளித்துள் ளன’ என்று தெரிவித்தார். இதனை மறுத்த ஒன்றிய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘‘கிறிஸ்தவ சமூகத்தி னா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு களில் பெரும்பாலானவை போலியானவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இணைய ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றம் இதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம், ‘‘தனிநபா் மீது நடத்தப்படும் தாக்குதல்களை, சமூ கத்தினா் மீதான தாக்குதல்களாகக் கருதக் கூடாது. எனினும், மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளவாறு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்த னவா? என்பதை நீதிமன்றம் உறுதி செய்ய விரும்புகிறது. இதுபோன்ற தாக்குதல் களைக் கண்காணிப்பதற்கான அதிகாரி களை மாநிலங்கள் நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டுள்ளது. அந்த உத்தரவு முறையாக நடை முறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய வேண்டியுள்ளது. எனவே, தாக்குதல் சம்பவங்கள் குறித்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கா்நாடகா, ஒடிசா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுக ளிடமிருந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் இரு மாதங்களுக்குள் விவரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.