சின்னாளப்பட்டி, ஆக.16- கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட த்தில் தென்னிந்திய அளவிலான ரோல் பால் போட்டி ஆகஸ்ட் 14, 15 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 11 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். தமிழக அணி சார்பில் 12 ஆண்கள், 12 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்கள் கேரள அணியுடன் விளை யாடி, இரண்டாம் பரிசை வென்ற னர். வெற்றி பெற்ற மாணவ, மாணவி களை ரோல் பால் சங்க மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மாஸ்டர் பிரேம்நாத், மூத்த பயிற்று நர் சுப்பிரமணி, மேலாளர்கள் தங்க லட்சுமி, காயத்ரி மற்றும் பெற்றோர் கள் பாராட்டி, வாழ்த்தினர்.