states

உச்சநீதிமன்றம் எச்சரிக்கையுடன் அணுகிட வேண்டும் : சிபிஎம்

புதுதில்லி, மே 21- மதுரா மசூதி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மிகவும் எச்சரிக்கையுடன் அணுகிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மதுராவில் உள்ள கியான்வாபி மசூதி (Gyanvapi mosque) வளாகத்திற்குள் மாவட்ட நீதிமன்றத்தின் மேற்பார்வை யில் வீடியோ எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் மோசமான முடிவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் இம்முடிவினை மதவெறி சக்திகள் பயன்படுத்திக்கொள்ள முடியும். உச்சநீதி மன்றம் இந்த விஷயத்தில் இப்போது தலையிட்டிருக்கிறது. இப்பிரச்சனை மீது மிகவும் எச்சரிக்கையுடன் முடிவு எடுத்திட வேண்டும் என்றும், 1991ஆம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஷரத்துக்கள்) சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதி களை உளப்பூர்வமாகப் பரிசீலனை செய்திட வேண்டும் என்றும், எவ்விதமான மீறலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. மதம்சார்ந்த இடங்கள் தொடர்பாக இத்தகைய சர்ச்சைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், இப்போது இருக்கும் இடம் தொ டர்பாக மாற்றம் எதையும் அனுமதித்திடக் கூடாது என்பதற்கா கவும்தான் இந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில்  கூறியுள்ளது.  

                            (ந.நி.)