சென்னை,மே 12- ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்புக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராம லிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடு முழுவதுமுள்ள இறைச்சி யுணவுப் பிரியர்களின் பேராதர வினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரி யாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயாராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரி யாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும் சேர்த்தே குறிக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மே 13,14,15 ஆகிய தேதிகளில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வுக்கான தயாரிப்புக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், “பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெறாது” என்று கண்டனத்திற்குரிய கருத்தை தெரி வித்திருக்கிறார். ஆம்பூரில் அன்றாடம் 10 ஆயிரம் கிலோ அளவுக்கு விற்பனை யாகிறது மாட்டிறைச்சி. அந்தளவுக்கு அது அங்குள்ளவர்களில் பெரும் பான்மையினரால் விரும்பி உண்ணப் படுவதாக இருக்கிறது. ஆனாலும் ஆம்பூரில் நடக்கும் “பிரியாணி திரு விழா” என்கிற பொதுநிகழ்வில் அரசே ஒதுக்கிவைப்பதை ஏற்கமுடியாது என்று அக்கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம் நிர்வாகத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த வந்த துணை ஆட்சியர், “மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினால் சிலர் பன்றிக்கறி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை ஏற்காத சிலர் பிரச்சனை செய்யக்கூடும்” என்று இவராக ஒரு பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறார். உலகத்தில் எங்குமே ‘பன்றிக்கறி பிரியாணி’ என்ற வகையே இல்லாதபோது அவராக இப்படி மதக்கண்ணோட்டத்தில் ஒரு பிரச்சனையைக் கிளப்பி மாட்டுக்கறி பிரியாணியை நிராகரித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் மாட்டிறைச்சி நெடுங்காலமாகவே இடம் பெற்றிருப்பதை பண்பாட்டு மானுட வியல் சார்ந்த ஆய்வுகள் பலவும் நிறுவியுள்ளன.
ஆனால் இந்த வரலாற்றுண்மையை மறைத்து மாட்டை புனிதமாகவும் மாட்டிறைச்சி உண்பதை இழிவாகவும், பொதுவெளியில் புழங்கத்தகாததாகவும் இந்துத்துவ வாதிகள் கட்டமைத்துவரும் அவ தூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் பணிந்துவிட்டதோ என ஐயுற வேண்டியுள்ளது. தலித்துகள், இஸ்லாமியர் மட்டு மன்றி சாதி, மதம் கடந்து பெரும் பான்மையான உழைக்கும் மக்கள் விரும்பியுண்கிற – அவர்களின் கொண் டாட்டத்திற்குரிய மாட்டுக்கறியின் மீதான ஒவ்வாமையும் புறக்கணிப்பும் இம்மக்களின் உணவுப்பண்பாட்டை அவமதிப்பதாகி விடும் என்பதை உணர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மறுபரி சீலனை செய்யவேண்டும். மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெறும் வகையில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப் பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் தமுஎகச வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.