புதுதில்லி, ஜூலை 21 - கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மறு உடற்கூராய்வை, தாங்கள் பரிந்துரை செய்யும் மருத்துவர் குழு மூலமே மேற்கொள்ள வேண்டும் என்று அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 அன்று சந்தேகத்திற்கு உரிய முறையில் இறந்து போனார். தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் உடலை மறு உடற் கூராய்வு செய்யும் குழுவில் மூன்று அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நிய மித்து உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால், மருத்துவர் குழுவில் தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்துவரையும் சேர்க்கக் கோரி மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத் தில் முறையிட்டார். மேலும் மறு உடற்கூராய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவியின் உடற்கூராய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாது காப்புடன் மாணவியின் உடல் புதனன்று மறு கூராய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் மற்றுமொரு மேல்முறை யீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலி யுறுத்தி இருந்தார்.
அதனடிப்படையில், நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் பி.எஸ். நரசிம்மா ஆகி யோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு, ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளபோது மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டு மென எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “புதனன்று நடை பெற்ற மறு உடற்கூராய்வு மாணவி யின் பெற்றோராகிய நாங்கள் இல்லா மலேயே நடந்துள்ளது. உடற்கூராய்வு தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, தங்கள் தரப்பு பரிந்துரைக்கும் மருத்து வக் குழு மூலம் மறு உடற்கூராய்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
மேலும், “எனது மகள் சாவில் மர்மம் இருக்கிறது. உயர் நீதிமன்றம் உத்தர வுப்படி அரசு அமைத்த மருத்துவர்கள் குழுவில் நம்பிக்கை இல்லை. உரிய, நியாயமான விசாரணையை தமிழக அரசு செய்யவில்லை. எனவே உச்ச நீதிமன்றம்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டது. அப்போது, தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 2-ஆவது முறையாக மாணவியின் உடல் கூராய்வு செய்யப் பட்டது. அதுதொடர்பான தகவலும் பெற்றோருக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டது. மறு உடற்கூராய்வு மாலை 4 மணியளவில் நடைபெற்றது. மாணவியின் பெற்றோருக்கு பகல் 12.23 மணிக்கே அறிவிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. உரிய கால நேரம் இருந்தும் அவர்கள்தான் மறு உடற்கூராய்வுக்கு வரவில்லை. மற்றபடி உடற்கூராய்வு தொடர்பான அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மனுதாரர் ராம லிங்கம் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துகிறார்” என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் வாதத்தை ஏற்ற நீதி பதிகள், மாணவியின் தந்தை தரப்பைப் பார்த்து, “நீங்கள் (மாணவியின் தந்தை) கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் நிய மித்துள்ள மருத்துவர்களை நீங்கள் எப்படி குறைகூற முடியும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், உங்கள் மனு வை தள்ளுபடி செய்கிறோம் என்றும் கூறினர். அப்போது, “மறு உடற்கூராய்வு வின் போது வீடியோ பதிவு செய்யப் பட்டுள்ளது. அதனை தங்கள் தரப்பு வல்லுநர் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்” என மாணவியின் தந்தை தரப்பில் புதிய கோரிக்கை விடுக்கப் பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், “இந்த கோரிக்கைகளை சென்னை உயர்நீதி மன்றத்திலேயே வைக்கலாமே” என்று தெரிவித்ததுடன், மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கை தள்ளு படி செய்து உத்தரவிட்டனர். மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக இனி எந்தவொரு கோரிக்கை என்றாலும் ஏற்கெனவே வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றத்தையே நாட வேண்டும்” எனவும் அறிவுறுத்தினர். தமிழக அரசுத் தரப்பில், “சட்டம் - ஒழுங்கு காரணத்துக்காக மாணவியின் உடலை இதற்குமேல் தாமதிக்கா மல் நல்லடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என விடுக்கப்பட்ட கோரி க்கையை நிராகரித்த நீதிபதிகள், “உட லை நல்லடக்கம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்” என்று உத்தரவிட்டனர்.