திருவனந்தபுரம், ஜூன் 7- நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, உலகம் முழுவதும் குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனை யடுத்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக நடவடிக்கை எடுத்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் கள் பொறுப்பில் இருந்து நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர். இந்நிலையில், முஹமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்ப தாவது, “மதச் சார்பற்ற ஜனநாயக நாடு என்று அனைவராலும் போற்றப்படும் நமது நாட்டை, உலக நாடுகளின் முன்பு வெட்கப் படும் நிலைக்கு சங்பரிவார் சக்திகள் கொண்டு வந்துள்ளன. சங்பரிவார், மதவெறி சக்தி களுக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்ப வேண் டிய தருணம் இது. எனத் தெரிவித்துள்ளார்”.