ஆடம்பரப் பொருட்களின் விற்பனை வரியை 17% லிருந்து 25% ஆகவும், பொது விற்பனை வரியை 17% லிருந்து 18% ஆக வும் உயர்த்தி புதிய மசோதாவை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறை வேற்றியுள்ளது. இந்த புதிய மசோதா வால் வணிகவகுப்பு விமானப்பயண கட்டண மும், மொபைல்களின் விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி யுள்ளது. கடும் பொருளா தார நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான், 1.1 பில்லியன் டாலர் கடனைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த கோரி க்கைகளுக்காக வரி களை உயர்த்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்கெ னவே உருக்குலைந்த துருக்கி - சிரியா பகுதி யில் திங்களன்று மீண்டும் 6.3 மற்றும் 5.8 ரிக்டர் அள வில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், 6 பேர் பலியாகியுள்ளனர். 2 வார இடைவெளியில் மீண்டும் புதிய நில நடுக் கங்களைச் சந்தித்த துருக்கி மற்றும் சிரியா விற்கு கூடுதல் ஆத ரவை வழங்கத் தயாராக உள்ளோம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் தடுமாறிக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தரும் வகையில், அந்நாட்டிற்கு அறிவிக்கப்படாத பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு பெறப் போகும் நிலையில், தனது கூட்டாளிகள் மீது அழுத்தம் தருவதற்காகவே அவரின் இந்தப் பயணம் நிகழ்ந்த தாகக் கூறப்படுகிறது. மேலும் உதவிகளைச் செய்வோம் என்ற உறுதிமொழியை உக்ரைன் தலைநகர் கீவில் பைடன் அறிவித்தார்.
நேபாளத்தின் புதிய ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பை பிரதமர் புஷ்ப குமார் தஹல் வசம் ஒப்படைப்ப தாக அவருடைய கட்சி அறிவித்திருக்கிறது. அனைவரின் கருத்தை யும் கேட்டறியும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதால், அவருடைய முன்முயற்சியை ஆதரிப்போம் என்று ஆளும் கூட்டணியில் இல்லாத இரண்டு கட்சிகள் அறிவித்துள்ளன. தனது வேட்பாளரை முன்னிறுத்த எதிர்க்கட்சியான நேபாள காங்கிரசும் முயற்சித்து வருகிறது. பிரதமரின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என்று நேபாள கம்யூனிஸ்ட்(ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கூறியுள்ளது.
வியட்நாமின் மத்தியப்பகுதியில் உள்ள பின் டின் மாகாணத்தில் சர்வதேச வேதியியல் மாநாடு நடைபெற்றது. ஆசிய-பசிபிக் வேதியியலாளர்கள் சங்கத்தின் பத்தாவது மாநாட்டையொட்டி இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 25 நாடுகளில் இருந்து 350 விஞ்ஞானிகளும், ஏராளமான மாணவர்களும் பங்கேற்றனர். ஏராளமான வேதியியல் கோட்பாடுகள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டு, அவற்றின் மீது விவாதங்கள் நடைபெற்றன.