states

அதிமுக பொதுக்குழு நடக்குமா?

சென்னை, ஜூலை 8- அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை  உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜூலை 11-ஆம் தேதி  நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவை தடை  செய்ய கோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த  வழக்கின் தீர்ப்பு திங்கள் கிழமை காலை 9 மணிக்கு வெளியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் அறி வித்துள்ள நிலையில், தீர்ப்பு  அறிவிக்கப்படும் நாளில் தான் பொதுக்குழுவும் நடைபெறவுள்ளதால் பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதனிடையே ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடு ருவ வாய்ப்பு உள்ளது. இத னால் அலுவலகத்திற்கு கூடு தல் பாதுகாப்பு தேவை என  சென்னை காவல் ஆணை யர் அலுவலகத்தில் மனு அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.