தென்காசி ,ஜூன் 3- மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை புதிதாக அமைய இருக்கும் நான்கு வழிச் சாலை தென்காசி மாவட்டத்தில் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாய சங்கங் களின் போராட்டக்குழு நடத்திவருகிறது. தொடர் போராட்டம் காரணமாக வியாழக்கிழமையன்று செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மாற்று வழி யில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதற்கான எந்தக் காரணத்தையும் அதிகாரிகளால் தெரிவிக்க முடியவில்லை. மாற்று வழி யில் நான்கு வழிச் சாலை அமைப்பது குறித்து தில்லியில் உள்ள அதி காரிகள்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறினர். மேலும் ஏற்கனவே திட்ட மிட்ட பாதையில் சாலை அமைக்க தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால்,“ திட்டம் அறிவிக்கப்பட்ட 2018-ஆம் ஆண்டில் இருந்தே மாற்றுப் பாதை பற்றி விவசாயிகள் அரசுக்கு மனு அளித்து வரும் நிலையில் விவசாயி களோடு எதுவுமே பேசாமல் அரசு ஒப்புதல் அளித்திருப்பதை ஏற்க முடி யாது; எனவே எங்கள் நிலங்களில் எந்த வேலையையும் நீங்கள் செய்யக் கூடாது” என்று விவசாயிகள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் தரப்பில் கூறப்பட்ட கரு த்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அதிகாரிகள் கூறினர்.
இப்பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ. சண்முகம் மற்றும் மாநிலச் செய லாளர் அ.விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டத் தலைவர் கணபதி, துணை தலைவர் வேலுமயில் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சாரதி, மீரான்கனி, சாகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிகாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து விவசாயிகள் மத்தி யில் பெ. சண்முகம் பேசுகையில், மாற்று வழியில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும், விவசாயிகளின் நிலங்களில் அமைக்கக் கூடாது என்ற கருத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் நம்முடைய நிலங்களிலேயே பாதை அமைக்க வேண்டும் என்பதிலேயே குறி யாக இருந்தனர். மாற்று வழியில் பாதை அமைக்காமல் நம்முடைய நிலங்களில் பாதை அமைக்க முயற்சி எடுத்தால் நம்முடைய போராட்டம் பல மடங்கு வீரியத்துடன் நடைபெறும் என்பதை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிவிட்டு வந்துள்ளோம்” என்று கூறியதோடு, விவசாயிகள் ஒற்றுமையே வெற்றி யாக அமையும் என்றும் கூறினார்.