சென்னை, ஆக.26- ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வாக பதவி வகித்த திருமகன் ஈவேரா மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்.27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப் பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகனின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன், 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி உயர் நீதிமன்றத் தில் தேர்தல் வழக்கு தொடர்ந் திருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஆகியோருக்காக பிரச்சா ரம் செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தன. ஆளுங்கட்சி யினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் அவர் கோரியிருந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக வேட்பா ளர் தென்னரசு உள்ளிட்டோர் பதி லளிக்க உத்தரவிட்டு விசார ணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.