states

மதுரை முக்கிய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கூட கண்காணிப்பாளர்களுக்கு  முறையான பயிற்சி அளிக்க கோரிக்கை

பழனி, ஜூன் 5- டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் தேர்வு கூட கண்காணிப்பாளர்/ மேற்பார்வையாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மே 21 அன்று குரூப்-2 தேர்வினை நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இந்த தேர்வுகள் நடத்தும் தேர்வு கூட கண்காணிப்பாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் தேர்வு அறையில் தேர்வு வினா வழங்கல் , கையெழுத்து உள்ளிட்டவை வழங்கல் பெறுதலில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.இதனால் அழிப்பானை பயன்படுத்தும் நிலைக்கு போட்டித்தேர்வர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் 2 முதல் 4 மதிப்பெண்கள் வரை தேர்வர்கள் இழக்கும் நிலை உள்ளது. குரூப்-4 தேர்வை 22 லட்சம் பேர் ஜூலை 24 அன்று எழுதவுள்ள நிலையில் இது போன்ற குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க தேர்வு கூட கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கினால் தேர்வர்கள் மன மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்வர். டிஎன்பிஎஸ்சி மிகச் சிறப்பாக தேர்வுகளை நடத்தினாலும் ஆங்காங்கே இதுபோன்ற சிறு விசயங்களால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர். எனவே தேர்வு கூட கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக பயிற்சி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

வாலிபர் சங்க கிளை மாநாடுகள்'

மதுரை, ஜூன் 5-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின மதுரை மாநகர்  பழங்காநத்தம் பகுதிக்குழு பசுமலை அண்ணா நகர் கிளை மாநாடு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவராக மதியழகன், செயலாளராக அருண் ,பொருளாளராக சூர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  பழங்காநத்தம் பசும்பொன் நகர் கிளை மாநாடு நடை பெற்றது. கிளைத்தலைவராக முனியாண்டி, செயலாள ராக சபரி, பொருளாளராக ஈஸ்வரன் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

6 ஆவது டிஎன்பிஎல் கிரிக்கெட் ஜூன் 23 நெல்லையில் துவக்கம்

திண்டுக்கல், ஜுன் 5- 6 ஆவது தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் ஜுன் 23  அன்று திருநெல்வேலியில் தொடங்குகிறது. நெல்லை  ஐ.சி.எல். சங்கர் நகர் மைதானத்திலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரியிலும், கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியிலும் , சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறு கின்றன. இந்த முறை கோவை, சேலம் ஆகிய ஊர்களில் புதிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 28 நாட்களில் 32 போட்டிகள் நடைபெறுகின்றன.  இது தொடர்பாக திண்டுக்கல்லில் நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பில் டாக்டர் ஆர்.என்.பாபா, திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் ஹரிநிசாந்த், அதன் உரிமை யாளர் எச்.ஆர். சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசி யேசன் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி, தமிழ்நாடு பிரிமியர்  லீக் தலைவர் கே.சிவக்குமார், மதுரை பேந்தர் அணியின்  கேப்டன் என்.எஸ்.சதுர்வேத், மற்றும் எம்.சிவக்குமார், டி.மகேந்திரகுமார்,கே.சிவக்குமார், மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இப்போட்டியில் நெல்லை இளைஞர்களை உள்ளடக்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்கு கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சூப்பர் கில்லீஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

மாதர் சங்க மதுரை மாநகர் மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

மதுரை, ஜூன் 5- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை  மாநகர் மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்புக்  கூட்டம் மற்றும் மூத்த தலைவர் எஸ்.ஞானம் படத்திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று மேலப்பொன்னகரம் சிஐடியு அலுவலகத்தில் மேலப்பொன்னகரம் பகுதிக்குழு உறுப்பி னர் ப்ரிதி தலைமையில் நடைபெற்றது.  மாநிலப் பொதுச் செயலாளர் பி. சுகந்தி தோழர் எஸ்.  ஞானம் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி னார். மாநிலச் செயலாளர் எஸ். கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, சோக்கோ அறக்கட் டளை நிர்வாகி வழக்கறிஞர் எஸ்.செல்வகோமதி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன், காப்பீட்டு கழக  ஊழியர் சங்க மதுரை கோட்ட பொதுச் செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணண், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி. செல்வா, மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ். வேல்தேவா, பெண்கள் இயக்கம் மனோகரி தாஸ், தோழர் ஞானம் கணவர் வி. சங்கரலிங்கம் மற்றும் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட 16வது  மாநாடு ஜூலை 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வர வேற்புக்குழு தலைவராக என்.ஜெயச்சந்திரன், செயலா ளராக ஆர். சசிகலா, பொருளாளராக என். நிருபனா உள்பட 49 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

பெரியாறு, வைகை அணைகளில் கூடுதல் தண்ணீர் திறப்பு 

தேனி, ஜூன் 5- முலைப்பெரியாறு அணை நீர் மட்டம் 130 அடியை  தாண்டியதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்  காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வெயி லின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாசனத்துக்கு கூடு தல் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே பாசனத்துக்கு 200 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு 300 கன அடியாக  அதிகரிக்கப்பட்டது. அதன்படி ஞாயிறன்று காலை முதல் பாசனத்துக்கு 300 கன அடி, குடிநீருக்கு 100 கன அடி என மொத்தம் 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 40 கன அடி நீர் வருகிறது. நீர் மட்டம் 132.15 அடியாக உள்ளது. ஞாயிறன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.58 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாச னத்திற்கு தண்ணீர் திறப்பு 500 கனஅடியில் இருந்து 600 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 கனஅடி என மொத்தம் 669 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 40 அடி, வரத்து இல்லை. திறப்பு 47 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 90.20 அடி, திறப்பு 3 கனஅடி. நீர் வரத்து இல்லை.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

சிவகாசி, ஜூன் 5- சிவகாசியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு  சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(42). மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில், வழக்கம் போல பணிமுடிந்து வீட்டிற்கு வந்த பாலமுருகன், தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின்  முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்த  போது வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த பாலமுருகன், சிவகாசி கிழக்கு காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இராஜபாளையம்  இராஜபாளையம் செவல்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த ராமகிருசுணன் (56) தையல் தொழிலாளி. இவரது  சகோதரர் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மண்ட பம் நுழைவு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றவர். நிகழ்வு முடிந்து திரும்பி வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை.

சாதிப்பெயரைச் சொல்லி  தாக்கிய 2 பேர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 5- திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் துப்புரவு சிப்பந்தி  காலனியில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் முத்துக்  குமார். இவர் வாலாங்குளம் கண்மாயில் குளிக்கச்சென் றார். பின்னர், மம்சாபுரம் பொன்னுச்சாமி தெருவை சேர்ந்த  தங்கேஸ்வரன், அய்யனார் மற்றும் இரண்டு பேர் உள்ளிட்ட  நால்வரும் அமர்ந்திருப்பதை கண்டு சைக்கிளை எடுக்கப் போகிறேன் விலகுங்கள் என்று முத்துக்குமார் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் நால்வரும் முத்துக்குமாரின் சாதிப்  பெயரை சொல்லி தாக்கியுள்ளனர், இவர் அவர் காய மடைந்தார். திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்து மம்சாபுரம் காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்று  தங்கேஸ்வரன், அய்யனார் இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி

சாத்தூர், ஜூன் 5- சாத்தூர் அருகே உள்ள கோபாலபுரம் நடுத்தெருவைச்  சேர்நத்வர் குருநாதன்(62). இவர் சாத்தூர் அணுகுசாலை யில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் குருநாதன் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதி யது. இதில் படுகாயமடைந்த குருநாதனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக செல்லும்  வழியில் குருநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகன் என்பவர் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அத்னபேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விபத்து ஏற்படுத்திய மனோஜ்குமார்(26) என்பவரை கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.

சூரிய ஒளித் தகடுகள் மாயம்

காரியாபட்டி, ஜூன் 5- காரியாபட்டி அருகே தோட்த்தில் தண்ணீர் பாய்ச்ச வைக்கப்பட்டிருந்த ரூ.2.15லட்சம் மதிப்பிலான சூரிய ஒளித் தகடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(36). விவசாயியான இவர், தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச அரசு திட்டத்தில் சூரிய ஒளித் தகடுகள் பெற்றிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல அதிகாலை தோட்டத்திற்கு சென்ற போது, அங்கிருந்த சூரிய ஒளித் தகடுகள் மற்றும்  கண்ட்ரோல் பேனல் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய  வந்தது. எனவே, இதுகுறித்து பாலமுருகன் அ.முக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமேசுவரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கடல் அட்டை பறிமுதல்

இராமேசுவரம், ஜூன் 5- இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்த இருப்பதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைதொடர்ந்து, வனத்துறையினர் இராமேசுவரம் கடற்கரையோரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் முட்புதருக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். சாக்கு மூடையை பிரித்து சோதனையிட்ட போது அதில், தடை செய்யப்  பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருப்பது தெரியவந்தது. இந்த அட்டையை இலங்கை கடத்த மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 600 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்ட சட்ட ஆணைக்குழுவில்  சட்ட துணை தன்னார்வலராக பணிபுரிய வாய்ப்பு 

தேனி, ஜூன் 5- தேனி மாவட்ட சட்ட ஆணைக்குழுவில் சட்ட துணை தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் சட்ட ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: மாவட்ட ஆணைக்குழுவில் 12, பெரியகுளம், பாளை யத்தில் வட்ட சட்ட ஆணைக்குழுவில் 10, போடி, ஆண்டி பட்டி வட்ட ஆணைக்குழுவில் 7 என மொத்தம் 50 சட்ட துணை  தன்னார்வலர் காலியிடங்கள் உள்ளன. ஆணைக்குழு விதிப்படி மதிப்பூதியம் வழங்கப்படும். 21 வயது நிரம்பிய  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் தலைவர், தேனி மாவட்ட சட்ட  பணி ஆணைக்குழு, ஏடிஆர் மையம், மாவட்ட நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தேனி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.