சென்னை,ஜூலை 13- அதிமுக தலைமை அலுவ லகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின் வழக்கமான நடைமுறைப்படி விசார ணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி கலவரத்திற்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்களால் சீல் வைக்கப் பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் புதனன்று (ஜூலை 13) விசாரணைக்கு பட்டியலிடப் படாததால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ், நீதிபதி சதீஷ்குமார் முன் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
என முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதி, எம்எல்ஏ தாக்கல் செய்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண்ணிடும் (அதாவது வரிசை முறைப்படி) நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித் தார். இந்நிலையில், அதிமுக அலுவல கத்துக்கு வைக்கப்பட்ட சீலை, அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக ஜூலை 12 பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தி ருந்தார். இதேபோல ஒ.பன்னீர் செல்வம் தரப்பிலும் முறையீடு செய்யப் பட்டுள்ளது. அந்த மனுவில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறிப்பாக, அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து வரும் ஜூலை 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக் கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.