சென்னை, செப். 3- கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலம், உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து துவங்கு கிறதா, முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து துவங்குகிறதா, என்பது குறித்து பதில ளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி, கூட்டு றவு சங்கங்களை நிர்வகிக்க நிர்வாகியை நிய மித்து கடந்த ஆகஸ்டில் அரசு உத்த ரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக் காலம் அமலுக்கு வருவதால், 2024ஆம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கை யில் தலையிட தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரி யும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, பதவிக்காலம் துவங்கு வதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சின்னசாமி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்தான், உறுப்பினர்களின் பதவிக்காலம் துவங்குவதாகவும், இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் கூட்டம் நடந்த தால், அதன் பிறகே பதவிக்காலம் துவங்கும் என்றும், 2024ஆம் ஆண்டு ஜூன் வரை பதவி க்காலம் உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர், 2018ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளி யாயின என்பதால், அன்றைய தினம் முதல் பதவிக்காலம் துவங்கியுள்ளதாக தெரிவிக் கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பதவிக்காலம் துவங்கு கிறதா? முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து துவங்குகிறதா? என பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசார ணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை நியமித்த உத்தரவை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.