உதயமாகிறது குழந்தைகள் நலத்துறை
அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை திறம்படச் செயல்படுத்தவும் அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உரிய ஆலோசனைகள் வழங்கவும் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஒரு நபர் குழுவின் பரிந்துரை களின் அடிப்படையில் உரிய சீர்த்திருந்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இதுவரை சமூகப் பாதுகாப்பு துறை என்ற பெயரில் இயங்கி வந்த இந்த துறை இனி “குழந்தை கள் நலன் மற்றும் சிறப்பு பாதுகாப்பு துறை” என பெயர் மாற்றப்படும். மேலும், முதற்கட்டமாக கோவை குழந்தைகளுக்கான திறன் பயிற்சிக் கூடம், ஆலோசனை அறைகள், நூலகம், குடும்ப பார்வையாளர்கள் என ஒரு மாதிரி இல்லம் “பூஞ்சேலை” என்ற பெயரில் அமைக்கப்படும்.
மாற்று பாலினத்தவரின் கல்விச்செலவுகள்
அரசு ஏற்கிறது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப் படும். உயர் கல்வித் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதி கட்டண செலவுகள் முழு வதையும் அரசு ஏற்கும். இந்த திட்டம் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தப் படும்.
கூடுதல் நிதி
உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) 6 ஆயிரத்து 967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு பட்ஜெட் டில் கூடுதலாக 1,245 கோடி ஒதுக்கப்பட்டு, ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 8 ஆயிரத்து 212 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டு உள்ளது. பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டில் (2023-2024) 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. நடப்பு பட்ஜெட்டில் கூடு தலாக 3 ஆயிரத்து 743 கோடி ரூபாய் அதிகரித்து, 44 ஆயிரத்து 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 18 ஆயிரத்து 661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.. இது நடப்பு பட்ஜெட்டில் ரூ. 20 ஆயி ரத்து 198 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
பற்றாக்குறை அதிகரிப்பு
கடந்த 2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக் குறை ரூ. 37 ஆயிரத்து 540 கோடியாக இருந்தது. அது 2024-25 நிதியாண்டில் ரூ. 44 ஆயிரத்து 907 கோடி யாக அதிகரித்துள்ளது. நிதிப்பற்றாக்குறை ரூ. 1, 08, 690 கோடியாக உள்ளது. இது மாநில மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 3.46 சதவிகிதம் ஆகும்.