மும்பை, மே 10- மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் முதல் மாதவிடாய் ரத்தக்கறையால் சந்தேகம் ஏற்பட்டு 12 வயது சிறுமியை அவரது சகோதரர் அடித்தே கொன்ற கொடுமை நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ் நகரில் சுமித் (30) என்பவர் மனைவி மற்றும் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு 12 வயதான சுமித்தின் சகோதரி உடல்முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும், அந்தச் சிறுமி செவ்வா யன்று இரவு இறந்தார். சிறுமி சிகிச்சையில் இருந்த பொழுது அமைதியாக இருந்த மருத்துவமனை நிர்வாகம், சிறுமி இறந்தவுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனடிப்படையில் விசாரித்த போலீசார் சுமித்திடம் விசா ரணை நடத்தி அவரை கைதுசெய்தனர். முதல் மாதவிடாய் போலீசார் விசாரணையில் 12 வயது சிறுமியின் ஆடையில் ரத்தக்கறை இருந்ததாகவும், பாலியல் தொடர்பு சந்தேகத்தில் சூடு வைத்து கண்டித்த தால் இறந்ததாகவும் சுமித் கூறியுள்ளார். ஆனால் உண்மை நிலவரம் (மருத்துவ அறிக்கையின்படி) என்ன வென்றால் சிறுமியின் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதுதொடர் பாக விசாரித்துள்ளார் சுமித். முதல் மாதவிடாய் என்பதால் சிறுமியால் திடமாக பதில் கூற முடியவில்லை. ஆனால் சுமித்,”நீ தவறான பாலியல் தொடர்பால் உன் ஆடையில் ரத்தம் உள்ளது” என்று கூறி சிறுமியின் வாயில் துணியை வைத்துக் கட்டி, அடித்து சித்ரவதை செய்து உடல் முழு வதும் சூடு வைத்துள்ளார். வலி பொறுக்க முடியாமல் அலறியதால் பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிறுமி செவ்வாயன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தானே போலீசார் சுமித்தை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் (கொலைக் குற்றம்) கைது செய்தனர். இந்தக் கொலையில் சுமித்தின் மனைவிக்கும் தொடர்பிருக் கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாலியல் கல்வி வேண்டும் : நடிகை ராஷ்மி வலியுறுத்தல்
தெலுங்கு நடிகையும், சமூக, விலங்கு நல ஆர்வலருமான ராஷ்மி கவுதம் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கூறியிருப்பதாவது,”மாதவிடாய் ரத்தத்தை பாலியல் உறவு இருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு 12 வயது சகோதரியை, அவரது சகோதரரே கொலை செய்துள்ளார். இதற்குக் காரணம் பாலியல் கல்வி இல்லாதது மட்டுமே. குறைந்தபட்ச பாலியல் அடிப்படை விழிப்புணர்வு இல்லாததால் தான் இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன” எனக் கூறியுள்ளார்.