states

நிலக்கரி ஒதுக்காத ஒன்றிய பாஜக அரசே மின்வெட்டிற்கு முழுக்காரணம்

கும்பகோணம்,ஏப்.23-  தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டுக்கு ஒன்றிய பாஜக அரசே முழுக் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில அரசுகளுக்கு ஒதுக்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு ஒதுக்கா ததே தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டுக்கு தலையாய காரணம். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான அறிக்கை அளிக்க உள்ளார்.  ஆளுநர் என்ற தனிப்பட்ட நபருக் காக கருப்புக்கொடி காட்டப்பட வில்லை. நீட் தேர்வு உள்ளிட்ட தமிழ் நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காகவே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக அரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவும், முகலாய மன்னன் பெயரில் உள்ளதும் தான் தில்லி ஜஹாங்கீர்புரியில் குடிசைகள் அகற்றப்பட்ட தற்கான காரணம் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.