states

தனிநபர், கார்ப்பரேட் நன்கொடையில் 82 சதவிகிதத்தை அள்ளிய பாஜக!

புதுதில்லி, ஏப்.22- ஒன்றிய மோடி அரசு கோது மைக் கொள்முதலை பெரும் கார்ப்பரேட்டான அதானியிடம் கொடுத்துவிட்டது. விவசாயிகளின் விளைபொருட்கள் அதானி-யிடம் செல்லும் வகையில் ஒன்றிய அரசு  அதற்கான அமைப்பை உருவாக்கி யுள்ளது. கோதுமை விளைச்சல் அதிகமுள்ள இடங்களான பஞ்  சாப்பின் மோகா மற்றும் ஹரி யானாவின் கைதால் ஆகியவற்றில் கொள்முதல் நிலையங்கள் மூடப்  பட்டுவிட்டன. அரசு கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டு அதானி யின் சேமிப்புக் கிட்டங்கிகளை ஒன்  றிய அரசு வாடகைக்கு பிடித்துள் ளது. இதனால் அதானியின் கிட்டங்  கிக்கு கோதுமையை கொண்டு  செல்வதைத் தவிர விவசாயி களுக்கு வேறுவழியில்லை. “விவசாயிகளின் கோதுமை இந்திய உணவுக்கழகத்திடம் தான் விற்கப்படுகிறது. அதானி குழு மத்திற்கு விற்கப்படவில்லை எனக் கூறப்படும் தகவல் தவறானது. போலியானது. விவசாயிகளை ஒன்  றிய அரசு தவறாக வழிநடத்துகிறது.

அரசு சார்பில் நடத்தப்படும் கொள் முதல் நிலையங்களை மூடவும், கோதுமை கொள்முதலை தனியார்நிறுவனங்களுக்கு கொடுக்கவும் ஒன்றியஅரசு திட்டமிட்டுள்ளது. அதனால் விவசாயிகளை  அதானி நிறுவனத்திற்கு கோதுமைகளை கொண்டுசெல்லவேண்டாம். நமக்கான தேவையைஅரசிடம் நேரடியாக பெற்றுக்கொள்ள லாம்” என்கிறார் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ஒருவர்.  குல்விந்தர் சிங் என்ற விவசாயி கூறுகையில், “ஒரு குவிண்டால் ரூ.2,015- க்கு (குறைந்தபட்ச ஆதார விலை) விற்பனை செய்கிறோம், குறைந்தபட்ச விலையை விட கூடுதலாக அதானிக்கு விற்பதாக ஒரு பிரச்சாரம் உள்ளது. அது முற் றிலும் உண்மைக்கு மாறானது” என்றார். அதானி அக்ரி லாஜிஸ்டிக் நிறு வனம் இரண்டு லட்சம் டன் கொள்ள ளவு கொண்ட கிட்டங்கியை வைத்  துள்ளது. இங்கு ஒவ்வொரு கோதுமை சீசனிலும் சுமார் 90,000 டன் கோதுமை சேமிக்கப்படும். நாங் கள் இந்திய உணவுக் கழகத்திற்கு இடத்தை மட்டுமே அளித்துள் ளோம். அவர்கள் அதானி குழு மத்திற்கு வாடகை மற்றும் கையா ளுதல் கட்டணத்தை தருகிறார்கள் என்கிறார்  மோகாவில் உள்ள அதானி அக்ரிலாஜிஸ்டிக் கிளஸ்டர் மேலாளர் அமன்தீப் சிங் சோனி.  இந்தாண்டு அதானியின் கிட்டங்கியில் சேமிக்கப்படுவதாக கதை சொல்லும் ஒன்றிய அரசு. அடுத்தாண்டு மொத்த கோதுமை  கொள்முதலையும் அதானியிடமே கொடுப்பதற்கான முன்னோட்  டம் தான் இது என்பதில் எந்த சந்தே கமுமில்லை.