states

நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை அக்னி பாதை உருவாக்கும்: இரா.முத்தரசன்

சென்னை,ஜூன் 20- நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த ராணு வத்திற்கு வீரர்களை சேர்ப்பதில் ‘அக்னி பாதை’ என்ற  புதிய திட்டத்தை ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியானதும் நாடு முழுவதும் இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். வடமாநிலங்க ளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத் தளபதிகளுடன் திரும்பத் திரும்ப  ஆலோசித்து வருகிறார். முன்னர் வெளியிட்ட அறிவிப்பில்  தளர்வு செய்து அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்து வதாக மீண்டும் மீண்டும் அறிவிப்பது போராடுபவர்களை ஆத்திரமூட்டி வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னி பாதை திட்டத்தை முற்றாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.