சென்னை, நவ. 14- முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் மேலும் 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வரு கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியுள்ளார். சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் தினம் 2022-ஐ முன்னிட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோ மீட்டர் கருவி களை வழங்கி, நீரிழிவு நோய் விழிப்பு ணர்வு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்க ளன்று (நவ. 14) வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் நீரிழிவு நோய் தாக்கத் திற்கு உள்ளானவர்கள் 10 முதல் 12 விழுக் காடாகவும், தமிழகத்தில் 13 விழுக்கா டாக்கவும் உள்ளது. மக்களை தேடி மருத்து வம் திட்டத்தினால் நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை கண்ட றியப்பட்டவர்கள் 26,40,727 பேர், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் பாதிப்புள்ளவர்கள் 19,26,136 பேர் என மொத்தம் நீரிழிவு நோயினால் பாதிக் கப்பட்டவர்கள் என்று கண்டறிப்பட்டவர்கள் 45,66,863 பேர். தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 72 விழுக்காட்டினர் பரி சோதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டாக முதலாம் ஆண்டு மரு த்துவ மாணவர்களுக்கான பாடப் புத்த கங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்து முடிப்பதற்காக 3 மருத்துவர்களுக்கு அயற்பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காயவியல் (3 தொகுதி), மருத்துவ தொழில் நுட்பவியல், குழந்தைகள் நல மருத்துவம், மயக்கியல், குழந்தைப் பருவ ரத்த நோய்கள் மற்றும் புற்றுநோய்கள், இயன்முறை மருத்து வம் மற்றும் நோய் தீர்க்கும் உணவு மருத்து வம் ஆகிய 7 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் 7 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரி வித்தார். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் முதல்வர் சாந்திமலர், மருத்து வமனை கண்காணிப்பாளர் ஆயிஷா ஷாகின், நிலைய மருத்துவ அலுவலர் வாணி, நீரிழிவு நோய் துறைத் தலைவர் அ.சண்மு கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.