states

இறக்குக்கூலியை உயர்த்தி வழங்குக! செப்.26இல் போராட்டம்

சேலம், செப். 2 - இறக்குக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி செப்.26 ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் அறி வித்துள்ளது. சிஐடியு, டாஸ்மாக் குடோன் சுமைப்பணி  தொழிலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், துணை கன்வீனர் அ.பிச்சை முத்து தலைமையில் சிஐடியு சேலம் மாவ ட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில், மதுபான உற்பத்தி நிறுவனங் களிடமிருந்து வரும் மதுபான பெட்டிகளை குடோனில் இறக்கி வைக்க வழங்கப்படும் இறக்குக்கூலி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தி வழங்காததால், தொடர் வேலை நிறுத்தம் உட்பட பல கட்ட  போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு சுமூகத்தீர்வு காண்பதாக உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது. ஆனால், அதன்பின் 3 மாதங்கள் கடந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே இறக்குக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். குடோனி லிருந்து மதுபான பெட்டிகளை விநியோக மையங்களுக்கு கொண்டு செல்லும் ட்ரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர்கள் சட்டப் படியான ஆண்டு போனஸ் வழங்க வேண்டும்  என வலியுறுத்தி, செப்.26 ஆம் தேதியன்று அனைத்து டாஸ்மாக் குடோன்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, கன்வீனர் எஸ்.குணசேகரன், சுமைப் பணி சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார், சம்மேளன நிர்வாகிகள் அ.கோவிந்தன், எம்.எஸ்.பீர்முகமது, கே.கஜேந்திரன் உட்பட தமிழ் நாடு முழுவதுமுள்ள டாஸ்மாக் குடோன் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.