சென்னை, டிச.19- ஜேஇஇ தேர்வில் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் கோ.அரவிந்த்சாமி, மாநிலச் செயலா ளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: 2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதன் மைத் தேர்வு எழுதுபவர்கள் டிசம்பர் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்திருந்தது. இதனை யடுத்து நாடு முழுவதும் விண்ணப்பிக்க துவங்கியுள்ள நிலையில், தமிழக மாண வர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. தற்போது ஜேஇஇ-க்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள். கொரோனா பெருந்தொற்று பாதிப்பினால் அன்றைய தமிழக அரசு, தேர்வுகளை நடத்த இயலாத சூழலில் ‘ஆல் பாஸ்’ என தேர்ச்சி அறிவித்திருந்தது.
அப்போது அவர் களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றி தழில் ‘பாஸ்’ என மட்டுமே குறிப்பிடப்பட்டுள் ளது. தற்போது அவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் அல்லது கிரேடு விவரம் நிரப்பும் படி கேட்கிறது. அதை நிரப்பாமல் அடுத்த விவரங்களை நிரப்ப முடியவில்லை. இத னால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு தமிழக மாணவர்களின் நலன் கருதி, மாற்று ஏற்பாட்டை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசும், உயர்கல்வி துறையும் இப்பிரச்சனையில் தலையிட்டு, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக மாணவர்கள் சார்பில் இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கி றது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.