சென்னை,ஏப்.6- திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடு கள் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் 2,05,802 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட் டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் புதன்கிழமை(ஏப்.6) கேள்வி நேரம் முடிந்ததும் 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரை யாற்றினார். அப்போது, “தமது தலைமையிலான அரசு பொறுப் பேற்று, 130 புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் அதன்பிறகு, “முதலீட்டா ளர்களின் முதல் முகவரி தமிழ் நாடு”, “ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு”, “சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந் தங்களையும் அதன் மூலம் உருவாகிய புதிய வேலை வாய்ப்புகளையும் பட்டிய லிட்டார். துபாய் மற்றும் அபுதாபி நாடு களில் நடைபெற்ற நிகழ்வுக ளில் 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக் கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட் டுள்ளது
என்றும் “சீரான மற்றும் பரவலான தொழில் வளர்ச்சி” எங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை,தேனி, தூத்துக் குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், குமரி ஆகிய 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படு கிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமையான ‘கைடண்சு’-க்கு ஆசியா ஒசியானியா பகுதியின் வரு டாந்திர முதலீடுகள் மாநாட்டில், ‘பெஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் பிரமோசன் ஏஜென்சி’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொரு ளாதார அமைப்பின் வருடாந் திர கூட்டத்திலும், ஜெர்மனியின் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறும் “குளோபல் ஆப் ஷோர் வின்ட்” நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்கா வின் முன்னணி முதலீட்டாளர் களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாக குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டின் இறுதி யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும். அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடு கள் திரட்டப்படும். நம்முடைய பல லட்சம் தமிழக இளைஞர்க ளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.