தூத்துக்குடி, ஆக.31- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரூ.832 கோடி முதலீட்டுக்கான ஐபிஓ(IPO) வெளியிடு கிறது. ஒரு பங்கு விலை ரூ.500 முதல் ரூ.525 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி யின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 1.58கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 100 ஆண்டுகள் பழமையான நம்பகத்தன்மையான வங்கியாக மக்கள் மத்தியில் விளங்கி வருகிறது. சிறு, குறு,நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் சில்லரை வர்த்த கர்கள் ஆகியோருக்கு பல்வேறு விதங் களில் கடனுதவியும், நிதிச்சேவையையும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அளித்து வருகிறது. 75 சதவீத முதலீடு நிறுவன முத லீட்டாளர்களிடமும், 15 சதவீதம் நிறு வனமில்லாத முதலீட்டாளர்களிடமும், 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களிடமும் முதலீடு திரட்ட வங்கி முடிவு செய்துள்ளது.
பங்குதாரர்களான டி. பிரேம் பழனி வேல், பிரியா ராஜன், பிரபாகர் மஹாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம். மல்லிகா ராணி, சுப்பிரமணியன் வெங்க டேஷ்வரன் ஐயர் ஆகியோர் வசம் இருக்கும் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு வெளியீடு தொடர்பாக ஐபிஓ ஆவணங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செபியிடம் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தாக்கல் செய்தது. அதற்கு கடந்த மே மாதம் 30ஆம் தேதி செபி அனுமதியளித்துள்ளது. 2021, ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, 509 கிளைகள் டிஎம்பி வங்கிக்கு உள்ளன. இதில் 247 வங்கிகள் சிறு நகரங்களிலும், 106 கிளைகள் கிராமங்களிலும், 80 கிளைகள் நகர்ப்புறங்களிலும், 76 கிளைகள் மெட்ரோ நகரங்களிலும் செயல்படுகின்றன. ஏறக்குறைய 49.30 லட்சம் வாடிக்கை யாளர்கள் உள்ளனர். இதில் 70சதவீதத்து க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியில் தொடர்ந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள் எனத் தெரிவித்தார். செய்தி யாளர் சந்திப்பில் தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கி பொது மேலாளர் சூரிய ராஜ், தலைமை நிதி அதிகாரி பி.ஏ.கிருஷ் ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.