states

சட்டமன்றத் துளிகள்...

மாற்றுத் தலைவர்கள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 9(1) ன் கீழ் 2024 ஆம் ஆண்டிற்கான  சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவராக சாக்கோட்டை க. அன்பழ கன் (கும்பகோணம்), கம்பம் நா. ராமகிருஷ்ணன் (கம்பம்), எஸ்.ஆர். ராஜா (தாம்பரம்), த.உதயசூரியன் (சங்க ராபுரம்) துரை. சந்திரசேகரன் (திருவை யாறு) ஆகியோர் நியமிக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.

ஆளுநர் பேச்சுக்கு  பேரவை வருத்தம்

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு  சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்களன்று பிப். 12 அன்று கூடியது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து, அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் தரப்பட்ட உரையை முழுவதும் பேரவை தலைவர் அப்பாவு வாசித்து முடித்தார். இந்த நிலையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் செவ்வாயன்று (பிப்.13) பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட ஆளுநர் உரையில், 46 பக்கங்களில் முதல் பக்கத்தினை மட்டும் படித்தும் மற்றும் சில பகுதிகளை தானாகவே இணைத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது. 2024 ஆம் ஆண்டு பிப்.12 அன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர்  பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்களாவர் என்ற தீர்மானத்தை திமுக உறுப்பினர் ராஜேந்திரன் முன்மொழிந்தார். பூண்டி கலைவாணன் வழி மொழிந்தார். பிறகு, விவாதம் தொடங்கியது.

உதயகுமாருக்கு உறுதியானது துணைத் தலைவர் இருக்கை

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர்  இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை தங்களை (பேரவைத்  தலைவர்) சந்தித்து கடிதம் கொடுத்துள் ளோம். பலமுறை நேரிலும் வலியுறுத்தி யுள்ளோம். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும். எனவே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கிறார். அதற்கு நீங்களும் பதில் சொல்லி வருகிறீர்கள். முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் கொடுத்த ஒரு தீர்ப்பை  சுட்டிக்காட்டி நீங்களும் பதில் கூறி உள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக் கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு உறுதியளித்தார்.

அத்திக்கடவு-அவிநாசி  திட்ட பணிகள் முடிந்தது!

சட்டப்பேரவையின் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருகிறது. விரைவில் மக்கள்  பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விழா நடைபெறும்”என்றார். சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றுவதற்காக கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணைக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிடப்பில் புனல் மின் திட்டம்!

பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல் புனல் மின் திட்டம் குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,“கர்நாடக மாநிலம் சிவ  சமுத்திரத்திற்கும் தமிழ் நாட்டில் உள்ள மேட்டூருக்கும் இடையில்  சிவசமுத்திரம், மேகதாது, ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் தேசிய நீர் மின்  குழுமத்தால் மொத்தம் 1150 மெகா வாட் மின்திறன் கொண்ட நீர் மின் நிலையங்கள்  அமைப்பதற்கான வரைவு முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு இசைவு தெரிவித்துள்ளது. ஆனால், கர்நாடக  மாநிலம் இதற்கு இசைவு அளிக்க வில்லை. இதனால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது”என்றார்.

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணி விரைவில் முடிக்கப்படும்!

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான சாலை பணி இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி கொடுத்தார். இன்னும் 3 மாதங்கள் தான் இருக்கிறது. எனவே, அந்த பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று கும்பகோணம் தொகுதி திமுக உறுப்பினர் க. அன்பழகன் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு,“ விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி என்பது முழுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மூன்று ஒப்பந்ததாரர்கள் செய்து வருகிறார்கள். இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். பிரதமரை நேரில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கடிதம் கொடுத்துள்ளார். நானும் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறேன். இந்த கடிதங்களுக்கு பிறகுதான்,  பணிகள் தொடங்கி நடைபெற்று  வருகிறது. அதிகாரிகளிடம் மேலும் வலியுறுத்தி ஜூன் மாதத்திற்குள் முடிப் பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.