states

பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஜூலை 19- கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டு அட்டவணை அறிக்கையை நிதி ஆயோக் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடத் தில் உள்ளது என்றும் மகாராஷ்டிரா (78.20), கர்நாடகா (76.36), குஜராத்  (73.22) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார். மாநிலங்களின் தனித்துவமான முயற்சி, அவற்றின் புவியியல் சார்ந்த  சாதக அம்சங்கள், மாநிலங்களுக்கு இடையேயான போட்டி ஆகியவை காரணமாக நாட்டின் ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள சுமன் பெர்ரி, ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டு அட்டவணை தயாரிப்பில் ஒவ் வொரு துறை வாரியாக ஏற்றுமதி அளவீடுகளும் மதிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மாநில அரசின் கொள்கை, வருத்தத்திற்குரிய சூழல், ஏற்றுமதி அதிகரிப்புக்கான நடவடிக்கை, ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகிய  அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்  கொல்லப்பட்டதாகவும் புள்ளி  விவரத் தயாரிப்புக்கு 56 விதமான காரணிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றும் நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, தொழில் நிறுவனங்கள் கட்டமைப்பு குறி யீட்டில் தமிழ்நாடு 97.21 புள்ளிகளை எடுத்துள்ளது என்று ஏற்றுமதி குறி யீட்டில் 73.68 புள்ளிகளும், ஏற்றுமதி செயல்பாட்டில் 63.34 புள்ளிகளும் எடுத்துள்ளது என்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.