states

img

இமாச்சலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி நிதியுதவி

சென்னை, ஆக. 22 - இயற்கைப் பேரிடரால் பாதிக்கப் பட்டுள்ள இமாச்சலப் பிரதேச மாநி லத்துக்கு தமிழ்நாடு சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கிற்கு தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடி தத்தில், “இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிர தேசத்திற்கு உதவுவதற்காக தமிழ் நாடு அரசும், மக்களும் எப்போதும் தயாராக இருக்கின்றனர். மேற் கொண்டு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.