சென்னை, ஜூன் 26 - கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநிலத்தில் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்கி உள்ளது. கோவிட் தொற்று பல்வேறு மாநிலங் களில் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னி யாகுமரி போன்ற மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் தொற்றுப்பரவல் அதிக மாக உள்ளது. பொதுஇடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்க வசம் அணியாமல் இருத்தல், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருத்தல் போன்றவற்றால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடை வெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்தல் வேண்டும். மேலும், தடுப்பூசியை உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப் படுத்த முடியும் என்று அரசு கூறியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணி யாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்கா தவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.