கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித் திரு விழாவை அரசியலுக்கும் வெறுப்புப் பேச்சுக்கு மான மேடையாக ஹைந்தவ சேவா சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வந்தனர். அதை தடை செய்துள்ள இந்து சமய அறநிலைய த்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு பாராட்டு களையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறது. இதை முன்வைத்து ஹைந்தவ சேவா சங்கமும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்பு களும் ஏதோ சமய நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்துவிட்டதாக அவதூறு பரப்புகின்றனர். தற்போது வெறுப்பு பேச்சு வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவிர ஆன்மீக சொற்பொழி வாளர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவதாக இந்து அறநிலையத்துறையினர் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு வாயடைத்துள்ளனர்.
இந்து மகா சபை, ஜனசங்கம் என்ற மத மாற்று வேசத்தோடு பரிவார் அமைப்புகள் வந்தபோதும் வளர முடியாத போது மத வன்முறைகள் மற்றும் வெறுப்புப் பேச்சின் மூலமாகவே காலூன்ற முயற்சிக்கின்றனர். 1982 இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறையை தூண்டி மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் காலூன்றிய பா.ஜ.க. அதே மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது போல் தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சங் பரிவார் அமைப்பு பெரும்பாலான இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளை கூட்டாளியாக வைத்துக் கொண்டு கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பக்தர்களை சுரண்டும் பணிகளைச் செய்து வருகின்றனர். ஆன்மீ கம் என்ற போர்வையில் சங்பரிவார் அமைப்புகள் கோயில்களை தங்கள் தளமாக்கிக் கொண்டு வெறுப்பு பிரச்சாரத்தையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அனைத்துக் கோயில்களிலும் ஆன்மீகத் திற்கு புறம்பான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. அதே போன்று மண்டைக்காடு பகவதியம்மன் கோயி லில் அரசியல் நிகழ்ச்சிக்குத் தடை விதித்ததை யொட்டி சட்டத்திற்கு சவால் விடும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசு வோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை சிபிஎம் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.