states

மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, மே 13-  நடிகை தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்ட னுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக காவல் துறையும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துக்  கொள்வதாக கூறி ஏமாற்றி யதாக நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் மணிகண்டன் என்னை திருமணம் செய்வ தாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்தோம்.  இப்போது என்னை திரு மணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என நடிகை புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படிடையில், சென்னை அடையாறு மகளிர் போலீஸ் மணிகண்டன் மீது 8 பிரிவில் வழக்கு பதிவு செய்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றனம் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், மணி கண்டன் ஜாமீனை ரத்து  செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் நடிகை மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.  இந்நிலையில், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் வழக்கு விசார ணை நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தமிழக காவல் துறையும் பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.