states

வாய்ப்பு கிடைத்தால் வழக்கறிஞராக பணிபுரியவே ஆசை!

புதுதில்லி, மே 21 - “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத் தால் வாழ்நாள் முழுதும் வழக்கறி ஞராக பணிபுரிவதற்கே விரும்பு கிறேன்” என, பிரிவு உபச்சார விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ் வர ராவ் பேசியுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எல்.நாகேஸ்வர ராவ், பார் கவுன்சி லில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 7-ஆவது நீதிபதி ஆவார். இவர், உச்ச நீதி மன்ற நீதிபதியாக, கடந்த 2016-ஆம்  ஆண்டு மே 13-ஆம் தேதி பொறுப் பேற்றார். அப்போது முதல் பல்வேறு முக்கியமான வழக்குகளில் அவர் தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.  இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான பேரறிவாளன் விடு தலை வழக்கு அதில் முக்கியமான தாகும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு கள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்ட பேரறிவாளனை இந்திய அரசி யல் அமைப்புச் சட்டத்தின் 142-வது  சட்டப் பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கும் தனித்துவமான அதிகா ரத்தைப் பயன்படுத்தி எல். நாகேஸ் வர ராவ் தலைமையிலான அமர்வு விடுதலை செய்தது.  

இந்நிலையில், ஜூன் 7-ஆம் தேதி யுடன் உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் ஓய்வுபெறுகிறார். முன்னதாக சனிக்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடு முறை அளிக்கப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமையன்று அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நடை பெற்ற விழாவில், மூத்த நீதிபதி கள், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று  எல். நாகேஸ்வர ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த விழாவில் பேசிய நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், “நான், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்ட போது, நீதிபதி கோகோயி டம், ‘நான் இன்னும் ஒரு வழக்கறிஞ ராகவே உணர்கிறேன்’ என்று தெரி வித்தேன். அதற்கு அவர், ‘அப்படி நீங்கள் நினைப்பது, மற்ற வழக்க றிஞர்களை நன்றாகப் புரிந்து கொள்ள உதவும்’ என்று கூறினார். நேற்று கூட, நான் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

இப் போதும் இந்தப் பக்கம் (பெஞ்ச்) விட அந்தப் பக்கம் (பார்) சிறந்தது என்று  நினைக்கிறேன். ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் வாழ்நாள் முழுவ தும் நான் வழக்கறிஞராகவே இருப் பேன்” என உருக்கமாகப் பேசி னார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், “தானும், நீதிபதி நாகேஸ்வர ராவும்,  ஒரே இடமான விஜயவாடா பார் அசோசியேஷனில் இருந்து வழக்க றிஞர் தொழிலை தொடங்கியதாகக் குறிப்பிட்டார். மேலும், “எல். நாகேஸ் வர ராவ், முதல் தலைமுறை வழக்கறி ஞர். அவர் வலிமையானவர். அவ ருக்கும், அவரது குடும்பத்தின ருக்கும் நல்வாழ்த்துக்கள். இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நாள். நாங்கள் ஒன்றாக வாழ்க்கையைத் தொடங்கினோம். சில காலத்திற்குப் பிறகு நானும் ஓய்வு பெற்று விடு வேன்” என, தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார். இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ஒரு மனிதனாக நான் நீதிபதி எல். நாகேஸ்வர ராவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என கூறினார். இந்தியாவிற்கான அட்டர்னி ஜென ரல் கே.கே. வேணுகோபால் பேசுகை யில், “நீதிமன்றம் மிகவும் நல்ல  மற்றும் சக்திவாய்ந்த நீதிபதியை இழக்கிறது” என்றும், “பேரறி வாளன் வழக்கின் தீர்ப்பு, இவர் வழங்கிய தீர்ப்புகளில் முக்கியத்து வம் வாய்ந்த ஒன்று” எனவும் குறிப்பிட்டார்.