புதுதில்லி, மார்ச் 2- பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகை யில், பங்குச்சந்தை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் தேவைப்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையிலான இந்த குழுவில், முன்னாள் நீதிபதி தேவதர், வங்கிதுறை வல்லுநர் கே.வி. காமத், முன்னாள் எஸ்பிஐ வங்கி சேர்மன் ஓ.பி. பட், இன்போசிஸ் இணை நிறு வனர் நந்தன் நீலகேணி, மூத்த வழக்கறி ஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது விசாரணையை நிறைவு செய்து 2 மாதத்தில் அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதேபோல, அதானி குழும நிறு வனங்களுக்கு எதிரான ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் கூறப்பட்டு ள்ள குற்றச்சாட்டுகளை இரண்டு மாதங் களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரி யத்திற்கும் (SEBI) உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதானி ஊழல் விவகாரம் தொடர் பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு அம்பலப்படுத்தியதை தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. பிப்ரவரி 10 அன்று தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கும் நிலையில், இது போன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முதலீட்டாளர்களின் நல னுக்காகவும், பங்குச் சந்தையின் நிலை யான வளர்ச்சிக்காகவும் ஒழுங்கு முறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம்” என குறிப் பிட்ட நீதிபதிகள், “தேவைப்பட்டால் பங்குச்சந்தை ஒழுங்கு முறைச் சட்ட விதி களில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைப்பது பற்றியும் ஆலோசிக்கலாம்” என்றும் பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ‘செபி’ அமைப்பிற்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டனர்.
பரிந்துரைக் கடிதத்தை ஏற்க மறுப்பு
இந்த வழக்கு பிப்ரவரி 13 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “பங்குச் சந்தையை வலுப்படுத்துவதற் கான வழிகளை ஆராய நிபுணர் குழு வை அமைப்பதில் ஒன்றிய அரசுக்கோ, ‘செபி’ அமைப்பிற்கோ எந்த ஆட்சேப மும் இல்லை. ஆனால், அதில் இடம் பெறும் நிபுணா்களை ஒன்றிய அரசே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று மோடி அரசு கூறியது. ஆனால், இந்தப் பரிந்துரைக் கடி தத்தை, உறையை பிரித்துப் பார்க்காம லேயே ஏற்க மறுத்து விட்ட, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜெ.பி. பர்தி வாலா அமர்வு, “முதலீட்டாளர்களின் நலன் கருதி வெளிப்படைத் தன்மை யை உறுதிப்படுத்த தாங்கள் விரும்பு வதாகவும், நிபுணர் குழுவில் யார் உறுப்பினராக இருக்க வேண்டும் என் பது தொடர்பாக அரசு அல்லது மனு தாரர்கள் அளிக்கும் பரந்துரையை ஏற்கப் போவதில்லை; நிபணர் குழுவை தாங்களே முடிவு செய்யப் போவதாக வும்” நீதிபதிகள் அறிவித்தனர்.
6 வல்லுநர் குழு
அதன்படியே வியாழனன்று இவ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் 6 வல்லுநர்களைக் கொண்ட குழுவை தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அமைத்துள் ளது. மேலும், அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் பின்னணியில், பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிகளின் விதி 19(a) மீறப்பட்டுள்ளதா; சட்டத் தின்படி ‘செபி’-க்கு தொடர்புடைய தரப்பினருடன் தொடர்புடைய கட்சி களுடனான பரிவர்த்தனைகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை வெளி யிடுவதில் தோல்வி அடைந்ததா; ஏற்கெ னவே உள்ள சட்டங்களுக்கு முரணாக பங்கு விலைகளில் ஏதேனும் கையா ளுதல் செய்யப்பட்டு உள்ளதா?” என ‘செபி’அமைப்புக்கும் தனியாக உத்த ரவு பிறப்பித்துள்ளது.