சென்னை, ஜூன் 2- அரசியலமைப்பு சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளை மாணவர்களிடமிருந்து பறிக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தின் நடவடிக்கையை இந்திய மாண வர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் கடிதம் எண்: பெ.ப/பி/கசா.வ- 2005142/22F45674/2022 நாள்:27.5.2022 என குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்று பல்கலைக்கழகத்தின் அனைத் துத் துறைகள் மற்றும் கல்லூரிகளுக் கும் துணைவேந்தர் ஆணைக்கி ணங்க பதிவாளர் அனுப்புவதாக அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் “பெரியார் பல்க லைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயி லும் மாணாக்கர்கள் பல்வேறு அமைப்பு களின் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை பல்கலைக்கழகம், கல்லூரி வளாகத்தில் மேற்கொள் வதை முற்றிலுமாக தடைசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும். இது தொடர்பாக மாணாக் கர்களுக்கு தகுந்த அறிவுரைகளை யும், வழிகாட்டுதலையும் வழங்கி மாணாக்கர்கள் முழுக்கவனத்தையும் கல்வி பயிலுவதில் செலுத்த வகை செய்யுமாறும், கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் எவ்விதமான அம்சமும் வளாகத்தில் இல்லை என்பதையும், பாதுகாப்பான சூழலில் தான் மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர் என்பதை பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் உறுதி செய்யுமாறு. பார்வையில் கண்டுள்ள துணைவேந் தரின் ஆணைப்படி தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பெரியார் பெயரில் அமைந்த பல்கலைக்கழக நிர்வாகம் அவ ருக்குச் செய்யும் அவமரியாதை. மாணவர்கள் அரசியல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது என்றால் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், புவி யியல், பொருளாதாரம், மனித உரிமை, பெண்ணுரிமை, சமூகவியல் போன்ற பாடங்களை பல்கலைக் கழ கம் நடத்தாமல் நிறுத்திக் கொள்ளுமா? பல்வேறு ஊழல் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களின் உரிமைகளை பறிப்பது நியாயமா? அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19 சங்கம் சேரும் உரிமை, பேச்சு மற்றும் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப் படுத்தும் உரிமை, இயக்கம் நடத்து தல், பரப்புரை செய்தல் போன்ற பல் வேறு ஜனநாயக உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் பெரியார் பல்கலைக்கழகம் இதை தடைசெய்வ தாக அறிவித்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதா கும். எனவே பல்கலைகழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் மீது உட னடியாக “ அரசியலமைப்புச் சட்ட உரி மைகளை அவமதிப்பது” என்ற வகை யின் கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய செயலின் மீது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் உடனடி யாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.