ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்
திருவனந்தபுரம், ஜுன் 25- வயநாட்டில் ராகுல் காந்தி எம்பி யின் அலு வலகம் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்ப வத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியி லான எதிர்ப்புகளுக்கும் கருத்து வெளிப்பாடு களுக்கும் சுதந்திரம் உள்ள நாடு இது. ஆனால் அதை வன்முறைக்கு இட்டுச்செல்வது தவறான போக்கு. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கூறினார்.
கல்பற்றா டிஎஸ்பி சஸ்பெண்ட்
வயநாடு எம்பி ராகுல் காந்தியின் அலுவல கத்திற்கு நடந்த பேரணி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து அரசு உயர்மட்ட விசாரணை நடத்தும். இது குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் தலைமையக ஏடிஜி பிக்கு உத்தரவிடுமாறு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரை முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் பணியில் இருந்த கல்பற்றா டிஎஸ்பி-யை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார். கல்பற்றா டிஎஸ்பி-யின் பொறுப்பை வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்க மாநில காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடந்தது முற்றிலும் தவறு: யெச்சூரி
வயநாட்டில் ராகுல் காந்தியின் எம்பி அலு வலகம் தாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை ஏற்க முடியாது. இப்படி அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடாது. நடந்தது முற்றிலும் தவறு என்று சிபிஎம் கருதுகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் கண்டனம் தெரி வித்துள்ளார். காவல்துறையினர் நடவ டிக்கையை தொடங்கியுள்ளனர். எஸ்எப்ஐ ஒரு சுதந்திரமான மாணவர் அமைப்பு. இந்த சம்பவத்தில் சிபிஎம் உறுப்பி னர்கள் ஈடுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக யெச்சூரி கூறினார். ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அமலாக்க இயக்குநரகம் வேட்டையாடுகிறது என்று யெச்சூரி கூறினார்.
பரவலான வன்முறை
வயநாடு எம்பி ராகுல் காந்தியின் அலுவல கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த சம்பவங்களை திரைமறைவாக கொண்டு, கேரளா முழுவதும் வன்முறை அரங்கேறியது. காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் சிபிஎம்-க்கு எதிராக பரவலான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். கட்சியும் அரசும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை வன்முறைக் கான வழியாக பார்த்தன. இந்த சம்பவத்திற்கு முதல்வர் மற்றும் மூத்த சிபிஎம் தலைவர்கள் கண்டனம் தெரி வித்ததையடுத்து தலைநகர் மற்றும் பிற மாவட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு அலுவலகமான ஏகேஜி மையத்துக்கு திடீரென மாற்றப்பட்டது.
ஏ.கே.ஜி.மையம் மீது தாக்குதல் நடத்தும் இளைஞர் காங்கிரசின் முயற்சி, பாளையம் காவல்துறையினர் உரிய நேரத்தில் தலை யிட்டதால் முறியடிக்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீணா எஸ்.நாயர் தலைமை யில் பெண்கள் ஏ.கே.ஜி மையத்திற்குள் நுழைய முயன்றபோது, மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமைத்திருந்த கொடிக்கம்பங்கள், பிரச்சாரப் பதாகைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் போராட்டக் காரர்கள் வீதிகளில் இறங்கியதால், மூத்த காங்கிரஸ் தலைவர்களும் வன்முறையில் இருந்து பின்வாங்கத் தயங்கினார்கள். மாறாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், கேபிசிசி தலைவர் கே.சுதாகரன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்டோர் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி வன்முறையைப் பரப்ப முயன்றனர். ராகுல் காந்தியின் அலுவலகத்தி ற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினால் பின் விளைவு ஏற்படும் என்று கூறியது ஊழியர்களை மேலும் வன்முறையில் ஈடுபடத் தூண்டியது.