states

“திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியது சரியான முடிவு அல்ல”

சென்னை, ஏப். 25- ஏழை-எளிய குடும்பத்தில் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்கு 10 ஆம் வகுப்பு நிறைவு செய்தாலே போதும்; திருமணத்திற்கு 5000 ரூபாய் வழங்கப்படும் என்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் 1989ஆம் ஆண்டில் திருமண நிதி உதவித் திட்டத்தை கொண்டு வந்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும் அதன் பிறகு  வந்த அதிமுக ஆட்சியால் நிறுத்த முடிய வில்லை. இதை மேலும் விரிவுபடுத்திய  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 10 மற்றும் 12 ஆம் வகுப்புதேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த பெண் களுக்கு 4 கிராம் தங்கம், 25,000 ரூபாய், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் 8 கிராம் தங்கம் வழங்கப் படும் என்றும் பழங்குடியின பெண்கள் எனில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருந்தால்25,000 ரூபாய் நிதி உதவியுடன் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தினார்.

வேட்டு வைத்த  எடப்பாடி அரசு...

கொரோனா வைரஸ் பரவல் முதல் அலையின் வேகம் 2019ஆம் ஆண்டில் அதிகரிக்க, பொது முடக்கமும் நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. இதையே காரணமாகக் கொண்டு, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தனது ஆட்சியை நிறைவு செய்யும்  வரைக்கும் ( 2021) தொடர்ந்து மூன்று  ஆண்டு காலமாக நிதி ஒதுக்கவில்லை. இதனால், கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் விண்ணப்பங்களை  நிலுவையில் வைத்து பயனாளிகள் தேர்வையும் நிறு த்தியது. ஆனாலும் மனுக்கள் வாங்கு வதை  நிறுத்தவில்லை. இதனால், திரு மண நிதி உதவி கேட்டு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் அதிகரித்தது.  இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசு 2021-22  ஆம் நிதியாண்டில் திருமண நிதிஉதவி  திட்டத்திற்காக திமுக அரசு ரூ. 763 கோடி ஒதுக்கியது. இதன் மூலம்  94 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு  மட்டுமே நிதியும் தங்கமும் கிடைத்தது.  சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பய னாளிகள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவி களின் உயர்கல்வி சேர்க்கை மிக குறை வாக இருப்பதை கருத்தில்கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தை “பெண்களின் உயர்கல்வி உறுதி” திட்ட மாக மாற்றுவதாக அரசு அறிவித்தது. இது பொது வெளியிலும், மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர பொதுச் சொத்து வேண்டும். பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து. அதனால்தான் இந்த திரு மண நிதி உதவி திட்டத்தை மாற்றி அமைக்க உள்ளோம்” என்றார். மேலும், ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தில் பலர் முறைகேடு செய்துள்ளதை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியிருக் கிறது என்றும் அதிமுக ஆட்சியில் விண்ணப்பித்தவர்களில் 24 விழுக்காட்டினர் மட்டுமே தகுதி யானவர்கள் என்றும் கூறினார்.

சரியான முடிவுல்ல: பி.சுகந்தி

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தியிடம் கேட்டபோது,“அரசுப் பள்ளிகளில்  12 ஆம் வகுப்பு வரைக்கும் படித்த ஏழை- எளிய மாணவிகளின் பட்ட மேற்படிப்பு க்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக திமுக அரசு அறி வித்ததை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்து உயர்  கல்வி உறுதித் திட்டமாக மாற்றியது சரி யான முடிவு அல்ல. திருமண உதவித் திட்டம்  பெண் கல்வியை ஊக்கப்படு த்தியது. ஏழை எளிய பெண்களின் திரு மணத்திற்கு பேருதவியாக இருந்தது. எனவே பழைய திட்டத்தை செயல் படுத்தப்பட வேண்டும்” என்றார். மாற்றம் எதற்காக? அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கையை காட்டிலும் புற்றீசல் போல் தனியார் கல்லூரிகள் பெருகிவிட்டன. கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய  குடும்பங்களின் பிள்ளைகள் அனை வருக்கும் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. தனியார் கல்லூரிகளில் அப்படியே இடம் கிடைத்தாலும் அவர்கள் நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை கட்டுவதற்கு வசதி கிடையாது. இதனால் கல்வி இடை நிற்றல் என்பது மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் ஆண் டொன்றுக்கு ஒரு லட்சம் பெண்கள் பயன டைவார்கள் என்றால் அது முழுக்க முழுக்க ஏழை, எளிய குடும்பங்களே. உயர்கல்வித் திட்டமாக மாற்றம் செய்யும் திட்டத்தில் 6 லட்சம் பேர் பயன்  அடைவார்கள் என்றால் அதில் ஏழைகள் எவ்வளவு பேர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020-2021ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் 1,08,000 என்று அரசின் புள்ளி விபரம்  கூறுகிறது. இதில் மூவலூர் இராமாமிர்தம்  அம்மையார் திருமண நிதி உதவி திட்ட த்தின் கீழ் பயனடைந்தவர்கள் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் - என்பதிலிருந்து, இந்தத் திட்டத்தில் தேவையை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், சட்டப்பேரவையில் ஏப்ரல் 23 ஆம் தேதி சமூக நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் தொடரும் என்று அமைச்சர் அறிவிப்பார் என்று காத்திருந்த ஏழை மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது!

-சி.ஸ்ரீராமுலு