states

ஒலிம்பிக்கில் தலையிடுவதை நிறுத்துக!

பெய்ஜிங், ஜன.28 - பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் தலையிடு வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சீனா கடுமை யாக எச்சரித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் நக ரத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4 ஆம் தேதி  தொடங்குகிறது. ஒலிம்பிக் கிற்கு அதிகாரப்பூர்வ குழு வை அனுப்பப்போவ தில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. இந்த நிலையில், அமெரி க்காவுக்கு சீனா கடும் எச்சரி க்கை விடுத்துள்ளது. அமெரி க்க வெளியுறவு அமைச்சர்  ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ‘‘பெய் ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தைவான் விவ காரத்தில் நெருப்புடன் விளை யாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என்று எச்சரிக் கை விடுத்தார்.

;